பெட்டிமுடியில் உயிர்தப்பிய அனைவருக்கும் புதிய வீடுகள் குழந்தைகளின் படிப்பை அரசே ஏற்கும் என அறிவிப்பு
மூணாறு, ஆக.13- பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி துயரத்துக்குள்ளாகி இருக்கும் அனை வருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை முழுமையாக அரசு ஏற்கும். குழந்தைகளின் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும் எனவும் பெட்டி முடி சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். பெட்டிமுடியில் 55 பேரின் உயிரைப் பறித்த நிலச்சரிவு பகுதியை ஆளுநர் ஆரிப் முகமது கானும் முதல்வர் பினராயி விஜயனும் பார்வையிட்டு பாதிக்கப் பட்டவர்களை வியாழனன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கேரள மாநிலம் மூணாறு அருகில் ராஜமலையில் உள்ள பெட்டிமுடி பகுதியில் கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டம் உள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கான லயங்களை (வரிசை வீடுகள்) தோட்ட நிர்வாகம் கட்டிக் கொடுத்துள்ளது. இவற்றில் தலைமுறை கடந்து குடும்பத்துடன் வசித்து வரு கின்றனர். கோவிட் காலத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் படித்து வந்த ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து பெற்றோரு டன் தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் (ஆகஸ்ட் 6 வியாழன்) பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வரிசைகளில் உள்ள 20 வீடுகள் மண் ணில் புதைந்தன. இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த பெரும் துயரத்தில் 82 பேர் சிக்கினர். விபத்து நடந்த பகுதியில் தக வல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வெள்ளியன்று காலை யில்தான் இத்தகவல் வெளி உலகுக்கு தெரியவந்தது.
மீட்புக் குழுவினர் உடனடியாக அப்பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு வழிகளை மண்ணும் மரங்களும் மூடி யிருந்தன. பெரியவறை தற்காலிக பாலம் கணியாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் மீட்பு பணிகளுக்கு தடையாக அமைந்தது. கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் ஒரு பகுதி வழி யாக நடந்து அக்கரைக்குச் சென்று, அங்கி ருந்து வேறு வாகனத்தில் மீட்புக்குழு வினர் சம்பவ இடம் சென்றடைந்தனர். முன்னதாக, பெட்டிமுடி பகுதியில் நிலச்சரிவிலிருந்து தப்பிய தொழி லாளர்கள் கடும் சிரமத்துக்கு இடையே, தடை ஏற்பட்டிருந்த பாதையை வாக னங்கள் செல்லுமளவுக்கு சீரமைத்தனர். உயிர்தப்பிய சிலருடன் அருகில் வசித்த தோட்டத் தொழிலாளர்கள் சேறு சகதிக்கிடையில் சிக்கிய 12 பேரை உயி ருடன் மீட்டனர். தொடர்ந்து கனமழை பெய்து வந்ததாலும் பாதை மூடப்பட்ட தாலும் மீட்புக்குழுவினர் வந்துசேர பல மணி நேர தாமதம் ஏற்பட்டது. காணாமல் போனவர்களை தேடும்பணி வெள்ளி யன்று தொடங்கி ஒருவாரமாக நீடித்து வருகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர் கள் எம்.எம்.மணி, இ.சந்திரசேகரன், சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட் டோர் முகாமிட்டு மீட்பு பணிகளுக்கு உத வினர். பெரும் பாறாங்கற்களை உடைத் தும், அருகில் உள்ள ஆற்றிலிருந்து மாக இதுவரை 55 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. 15 பேரை காணவில்லை.
இதற்கிடையே கேரள முதல்வர் பின ராயி விஜயன் உயிரிழந்தோர் குடும் பங்களுக்கு முதல்கட்ட நிவாரணமாக தலா ரூ.5 லட்சம் அறிவித்தார். பேரி டர் நிவாரணமாக இதற்கு முன்புவரை ரூ.4 லட்சம் அளித்து வந்த நிலையில் முதன்முதலாக பெட்டிமுடி தொழி லாளர் குடும்பங்களுக்கு இந்த தொகை அறிவிக்கப்பட்டது. அதோடு அனைத் தையும் இழந்துள்ள குடும்பங்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும் முதல்வர் தெரி வித்தார். அதோடு காலநிலை மற்றும், மீட்பு பணிகள் தொடர்வதால் உடனடி யாக அங்கு செல்ல முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வியாழனன்று காலை 9 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் ஆளுநருடன் முதல்வர் மூணாறு சென்றார்.பின்னர் அங்கிருந்து காரில் பெட்டிமுடி சென்றனர். அங்கு துயரத்தில் சிக்கி உயிருடன் மீட்கப் பட்டவர்களுக்கு தேவைப்பட்டால் உயர் சிகிச்சைக்கும் அரசு ஏற்பாடு செய்யும். அதற்கான செலவையும் அரசே ஏற்கும். இந்த பகுதியில் உள்ள லயங்களின் நிலை குறித்து கண்ணன் தேவன் நிறு வன அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு ள்ளது. லயங்களை அதிவிரைவில் சீர மைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 15 பேரை தேடும் பணிதொடர் கிறது. மீட்புக்குழுவினர் மிகுந்த ஆற்றலு டன் செயல்பட்டு வருகிறார்கள். துயரம் நடந்த உடன் எச்சரிக்கையுடன் மீட்பு பணி யில் ஈடுபட்டவர்களை பாராட்டுவதாக வும் முதல்வர் கூறினார். ஆளுநர் ஆரிப் முகமதுகான் கூறுகை யில், பெட்டிமுடியில் நடந்திருப்பது பெருந் துயரம் என்றார். துயரம் ஏற்பட்ட உடன் குடியரசுத்தலைவர் தன்னை அழைத்து விசாரித்ததாகவும் அவர் கூறினார். உயிர்பிழைத்த மற்ற லயங்களில் உள்ளவர்களை ஆளுநரும் முதல்வரும் சந்தித்து பேசினர். வருவாய்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன், மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன், டீன் குரியாகோஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், பிஜி மோள், டிஜிபி லோக்நாத் பெஹ்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.