மத்தியப்பிரதேசத்தில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், நிவாடி மாவட்டம் தலைமையகத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பராபுஜீர்க் கிராமம். அங்கு இன்று காலை 5 வயது சிறுவன் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்துள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் மீட்பு குழுவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த மீட்பு குழுவினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன், ஹரிகிஷன் குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் என தெரியவந்தது. தொழிலாளர்கள் அதில் ஒரு குழாய் உறையை வைக்கும் போது ஆழ்குழாய் கிணற்றில் விழுந்ததாக காவல்துறை அதிகாரிகள் நரேந்திர திரிபாதி கூறியுள்ளார். போர்வெல்லில் தரையில் இருந்து 10 ஆதி வரை தண்ணீர் உள்ளது. எனவே குழந்தை எந்த ஆழத்தில் உள்ளே சிக்கியுள்ளது என தெரியவில்லை என மீட்புப் பணியாளர்கள் கூறினார்கள். நிபுணர்களின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர். அண்மையில் தான் ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டதாக திரிபாதி கூறியுள்ளார்.