நாகர்கோவில், ஜூன் 2-அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், அரசுபள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள்,சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் சார்பில் தக்கலை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் விஷ்ணு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட், மாவட்ட தலைவர் விஜயராகவன், நிர்வாகிகள் காஸ்ட்ரோ, விஜி, மாநிலதலைவர் என்.ரெஜீஸ் குமார் ஆகியோர் பேசினர். இதில் வாலிபர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.