மதுரை
வேரில் இருந்து இலை வரை முழுக்கமுழுக்க பயன் தரும் தாவரமான தென்னையை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ஆம் தேதி ‘உலகதென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது. ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், 1969ம் ஆண்டுசெப்., 2ம் தேதி தொடங்கப்பட்டது
இந்த ஆண்டு உலக தேங்காய் தினத்தின் நோக்கம் “உலகைக் காப்பாற்ற தேங்காயில் முதலீடு செய்யுங்கள்”. என்பதுதான்.இந்தியாவில் தேங்காய் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. கேரளாவில் ஆண்டுக்கு 7448.65 மில்லியன், கர்நாடகா 6773.05 மில்லியன், தமிழ்நாடு 6570.63 மில்லியன் தேங்காய்உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது,போர்க்களத்தில் காயம்பட்ட வீரர் களுக்கு அவசர கால குளுகோஸ் மருந்தாகச் செலுத்தப்பட்டது, தேங்காய்தண்ணீர்தான் என்கிறது ஒரு தகவல்.உலக தேங்காய்தினத்தையொட்டி மதுரை அலங்காநல்லூர் அருகே அழகாபுரி, குட்டிமேய்க்கிபட்டி, சின்னஇலந்தைகுளம், கோவிலூர் ஆகிய கிராமங்களில்உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங் கன்றுகள் பசுமை நண்பர்கள்சார்பாக வழங்கப்பட்டது. தென்னை மரம்வளர்ப்பதன் அவசியம், மருத்துவக் குணங்கள் குறித்து பசுமை நண்பர்கள் நிர்வாகி பொன்குமார் விவசாயிகளுக்கு விளக்கினார்.