பெண்கள் - குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகள்
சென்னை, பிப். 28 - தமிழகத்தில் தொடரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பதற்கு உறுதியான நட வடிக்கைகளை எடுக்க வலி யுறுத்தி வெள்ளியன்று (பிப்.28) தலைமைச் செய லகம் நோக்கி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் பேரணி நடத்தினர். சென்னை எழும்பூர் புதுப் பேட்டை அருகே பழைய சித்ரா திரையரங்கம் அருகே பேரணி துவங்கிய நிலை யில், பேரணியை சிந்தா தரிப்பேட்டை அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அங்கேயே பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி, அகில இந்திய இணைச் செயலா ளர் பி. சுகந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொருளாளர் ஜி. பிரமிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் வெ. தனலட்சுமி நன்றி கூறினார். பேரணியின் முக்கியக் கோரிக்கைகள் “தமிழ்நாட்டில் கடந்த 6 மாதத்தில், 26 மாவட்டங் களில் பெண்கள் - குழந்தை களுக்கு எதிரான 92 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை மாதர் சங்கம் கையாண்டுள்ள நிலையில், பாலியல் வன்முறைகளைத் தடுக்க தீவிரமான நட வடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்; விசாரணையை தொடங்கும் போது, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கி, குற்றம் செய்தவர்களைப் பாதுகாக்கும் காவல்துறை - அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சாட்சிகளைப் பாதுகாக்க சிறப்புச் சட்டங் களை இயற்ற வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை தடுத்திடுக பெண்கள் மீதான வன்முறைக்கு போதை ஒரு காரணமாக உள்ளதால், போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும்; டாஸ்மாக் கடை களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும், போதை மற்றும் வன்முறைகளை தடுத்திட அனைத்து தரப்பினரையும் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை கிராம அள வில் உருவாக்க வேண்டும்; பெண்கள் - குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை விவாதிக்க சிறப்பு சட்ட மன்ற அமர்வை நடத்த வேண்டும்; கல்வி நிலை யங்களில், பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புக்கு ஏற்பாடு குழந்தைகள் நல ஆணை யத்திற்கு தலைவரைநடவடிக்கை எடுக்க வேண்டும்; கேரள மாநிலத்தை போன்று, குழந்தைகளுக்கென்று சிறப்புக் கொள்கை உருவாக்க வேண்டும்; பள்ளி - கல்லூரி பாடப்புத்தங்களில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் பாடத்திட்டங்களை சேர்க்க வேண்டும். பெண்கள் நலனுக்கான நடவடிக்கைகள் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும், சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்; நிர்பயா பாதுகாப்பு மையங்களை முறையாக செயல்படுத்த வேண்டும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்புகார்க்குழு அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்; பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாலின பட்ஜெட் உருவாக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளை துரிதமாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்; தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடித்திட போக்சோ நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றங்கள், எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடைபெற்றது.
சட்டங்களை அமல்படுத்தும் உறுதி அரசுக்கும் காவல்துறைக்கும் வேண்டும்!
பேரணியில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது: பேரணிக்குத் தலைமை வகித்து, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா பேசுகையில், “முதலமைச்சர் அறிவித்த உதவி எண் செயல்படவில்லை. நுண் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெண்களை காக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என்றார். அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி, “குற்றம் நடந்த பிறகு தலையிடுவதற்கு முன்பு குற்றம் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான கருத்தியல் போராட்டம் அவசியம். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பை அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாக்க வேண்டும்” என்றார். மேலும், “ஜனநாயக போராட்டங்களை தடுப்பதில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். சென்னையில் அனுமதிக்கப்பட்ட போராட்டத்திற்கு, பழனி, தருமபுரி, தஞ்சை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் காவல்துறையினர் எதற்காக தடுத்தனர்?” என்று கேள்வி எழுப்பினார். அகில இந்திய இணைச்செயலாளர் பி.சுகந்தி, “பாலியல் குற்றங்களில் 16 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். 2024-ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக 6 ஆயிரத்து 924 வழக்குகள் பதியப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து காவல்துறைக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மாநிலப் பொருளாளர் ஜி.பிரமிளா, “5 ஆயிரம் பெண்களிடம் எடுத்த ஆய்வில் 4 ஆயிரம் பெண்கள் ஏதோ ஒரு வகையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி உள்ளனர். பாலியல் புகார் கமிட்டிகள் முறையாக செயல்படுவதில்லை” என்று சுட்டிக்காட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் குழுத் தலைவர் நாகை மாலி, “பாலியல் சீண்டல்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை அமல்படுத்த அரசியல் உறுதி அவசியம். சட்டத்தை அமல்படுத்தாமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? ஆயிரம் சட்டங்கள் கொண்டு வந்தாலும், காவல்துறை நேர்மையாக செயல்படாவிட்டால் அவை அனைத்துமே வீண். பாலி யல் வன்முறை பிரச்சனை பெண்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, தமிழகத்தின் பிரச்சனை என்பதை உணர வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்தார்.