மதுரை, மார்ச் 19- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மதுரை மாவட்டக்குழு சார் பில் சர்வதேச மகளிர் தினம்- மாற்றுத்திறனாளி மகளி ருக்கு உதவி திட்டம் வழங் கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு காதுகேளா தோர் உரிமைகளுக்கான சங்க மாநிலச் செயலாளர் மா. சொர்ணவேல் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆ.பாலமுருகன் முன் னிலை வகித்தார். கன்வீனர் -முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா. பழனியம்மாள் வரவேற்றுப் பேசினார், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணைமேயர் டி. நாகராஜன், மாமன்ற உறுப்பி னர்கள் டி. குமரவேல், வை. ஜென்னியம்மாள், ம. தமிழ்ச்செல்வி, கர்மவீரர் காமராஜர் நினைவு காது கேளாதோர் தொண்டு அறக் கட்டளை கூட்டு நிர்வாக அறங்காவலர் சிவகாசி ப.சுமித்ரா, செயல் திறன் உத வியாளர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் நா.சாமிநாதன், கேரளா மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி பி.ஷைலஜா, ஏஎஸ்பி சன்ஷைன் டிரஸ்ட் அனிதா சௌந்தரபாண்டி, செயல் திறன் மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நல அலு வலர் ந.இராகவன், கேபிஎஸ் மஹால் உரிமையாளர் கே. பி. கோபாலகிருஷ்ணன், பெ. வெங்கடாசலபதி, காது கேளாதோர் மகளிர் அமைப்பு தலைவர் கே. அழகுசாந்தி, செயலாளர் எம். ராஜேஸ் வரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாற்றுத்திறனாளி கள் சங்கத்தில் செயல்படு பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு கேட யங்கள் வழங்கப்பட்டன. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.