tamilnadu

img

எங்கள் பிள்ளைகளான அரசுப் பள்ளிகளை தாரைவார்க்க மாட்டோம்: அமைச்சர் பேட்டி

சென்னை, ஜன.2- தமிழக அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகள், அவற் றைத் தாரைவார்க்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித் துப் பேசினார். “தமிழகத்தில் உள்ள 500 அரசுப் பள்ளிகளை தாரை வார்ப்பதாக வந்த தக வல்களில் உண்மையில்லை. நான் அவ்வாறு சொல்ல வில்லை. எனது தரப்பு விளக்கங் களை கேட்காமலேயே, கண்  டனத்தைப் பதிவு செய்கிறார் கள். தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டார்கள். ‘நம்ம ஊர், நம்ம பள்ளி’ என்று பலரும் சொந்த ஊரில்  உள்ள பள்ளிகளை மேம்படுத் தும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு  நிதி (சிஎஸ்ஆர்) திட்டத்தை, தமி ழக முதல்வர் ரூ. 5 லட்சம் கொடுத்துத் தொடங்கி வைத் தார். இந்த திட்டத்தின் கீழ்தான், தனியார் பள்ளிகள் அல்லது தனியார் அமைப்புகள் 500 அர சுப் பள்ளிகளுக்குத் தேவை யான உதவிகளை செய்ய முன்  வந்திருக்கின்றன. பள்ளி களுக்கு என்ன தேவை இருக்கி றதோ அதை மட்டும் அவர்கள்  செய்ய முன் வந்திருக்கிறார்கள். இதற்காக, அந்தப் பள்ளி யையே அவர்களிடம் ஒப்ப டைத்துவிட்டோம் என்று சொல்  வதில் நியாயமில்லை” என்று தெரிவித்தார். “தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் தத்தெ டுப்பதாக எங்கும் நான் சொல்ல வில்லை. தமிழகத்தின் அரசுப் பள்ளிகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கோ, தத்  துக்கொடுப்பதற்கோ தேவை யில்லை. ஏன் என்றால், அரசுப்  பள்ளிகள் என்பவை எங்கள்  பிள்ளைகள். எங்கள் பிள்ளை களை யாருக்கும் தாரை வார்க்க மாட்டோம். நாங்கள்தான் எங்  கள் பிள்ளைகளை வளர்த்தெ டுப்போமே தவிர, யாருக்கும் எங்கள் பிள்ளைகளைத் தத் துக்கொடுக்க மாட்டோம்” என்  றும் திட்டவட்டமாகக் கூறினார். ஒன்றிய அரசு மிரட்டுகிறது  மேலும் “கல்வி விவகாரத் தில் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே  நிதி வழங்கப்படும் என்று மிரட்டு கிறார்கள். ஆனால், எங்கள் கொள்கையில் நாங்கள் தெளி வாக இருக்கிறோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்  றுங்கள். எங்கள் பிள்ளைகளை  நாங்கள் பார்த்துக் கொள்கி றோம் என்று ஒன்றிய அரசுக்கு தெளிவாக தெரிவித்து விட் டோம்” என்றும் அமைச்சர் குறிப் பிட்டார். தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் இதேபோல, “மாணவர் களின் வளர்ச்சிக்காக அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த கார்ப்பரேட் சமூகப்  பொறுப்பு நிதியின் (சி.எஸ்.ஆர்)  மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொல்லப்பட்டதே தவிர,  எந்த இடத்திலும் அரசுப் பள்ளி களை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை, தத்தெடுப்போம் என்று அமைச் சர் உள்ளிட்ட அதிகாரிகளும்  யாரும் சொல்லவில்லை” என்று  தனியார் பள்ளிகள் சங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.