சென்னை,பிப்.22- நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2 நாட்க ளில் ஆயுஷ் அமைச் சகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னை கிண்டி யிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நடந்த விழா வில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு பெற்ற அரசுப் பள்ளி மாணவர் கள் 582 பேருக்கு கைய டக்க கணினியை அமைச் சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நீட் தேர்விலிருந்து விளக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விளக்கங் களை கேட்டுள்ளது இன்னும் இரண்டு நாட்க ளில் விளக்கம் அளிக்கப் படும். கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியோடு டாக்டர் எம்.ஜிஆர் மருத்துவ மனை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பொறுப்பு முடிவு பெற்றது. ஜனவரி 4 அன்று முன்னாள் சுகாதாரத்துறை செய லாளர் சுப்புராஜ் தலை மையில் இரண்டு மருத் துவர்கள் அடங்கிய தேடுதல் குழு உருவாக் கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலும் பெறப் பட்டது. அந்தக் குழு அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைய வுள்ள நிலையில் ஆளுநர் தான் இனி அந்த குழுவிற்கு வழிகாட்ட வேண்டும். ஆளுநர் சார்பில் அந்தக் குழுவிற்கு அலுவலர் ஒருவரை நியமிப்பார்கள். அந்த பணிகள் முடிந்த பிறகு அந்த தேடுதல் குழுவா னது 3 பேர்களை தேர்ந் தெடுத்து ஆளுநரிடம் வழங்குவார்கள். அந்த மூவரில் ஒருவரை ஆளு நர் விரைவில் தேர்ந் தெடுப்பார் என்று கருது கிறோம். தற்போது மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனை சேவைகளை பயன் படுத்த தொடங்கியுள்ள னர். ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம். ஆளுநரை சந்திப்பது விதி அல்லது மரபு தான். ஆனால் அவருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பதால் அவரை சந்திக்க காத் திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.