tamilnadu

img

புதுச்சேரி மாநில உரிமைகளுக்கான கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

புதுச்சேரி மாநில உரிமைகளுக்கான கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

புதுச்சேரி, மார்ச் 22- இந்திய அரசியலின் திசை வழியைத் தீர்மானிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மதுரையில் நடை பெறுகிறது. இந்த மாநாட்டை ஒட்டி  இந்திய நாடு முழுவதும் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வெவ் வேறு தலைப்புகளில் மாநாட்டு பிரச்சா ரக் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் வெள்ளியன்று (மார்ச் 21) மாலை “புதுச்சேரி மாநில உரிமை களுக்கான கருத்தரங்கம்” நடை பெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கட்சி யின் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச் சந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தர ராமன், வெ.பெருமாள், ஆர்.ராஜாங் கம், தா.முருகன், என்.பிரபுராஜ், ஜீ. சீனு வாசன், என். கொளஞ்சியப்பன், த.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு மாநிலச்  செயலாளர் கைது இந்தக் கருத்தரங்கில் சிறப்புரை யாற்றுவதற்கு வருகை தர இருந்த கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளின் நில உரிமை போராட்டத்தில் தலைமையேற்று கைது செய்யப்பட்டார்.

இரவு 9.00  மணி வரை தமிழக அரசு நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக்கே இழுத்த டித்ததால், அவரால் கருத்தரங்கில் பங்கேற்க முடியவில்லை.

காவல்துறை  நடவடிக்கைக்கு கண்டனம் தமிழ்நாடு அரசின் காவல்துறை கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவா கவும், உரிமைக்காக போராடிய விவ சாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தோழர்களை மூர்க்கத்தன மாக செயல்பட்டு, அராஜகமான முறை யில் கைது செய்ததையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு சார்பாக கருத்த ரங்கில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழக காவல்துறையின் இத்த கைய நடவடிக்கைக்கு எதிராக கண்டன முழக்கங்களை மேடையில் முழங்கினர்.

புதுச்சேரி அரசின்  பட்ஜெட் விமர்சனம் தொடர்ந்து புதுச்சேரி அரசின் மக்களுக்கு எதிரான பட்ஜெட்டை பொதுமக்கள் மத்தியில் விளக்கி தலை வர்கள் உரையாற்றினர். கூட்டத்தில் புதிய மதுபான ஆலைகளை அனு மதிக்க க்கூடாது, மூன்று பஞ்சாலைக ளை உடனடியாக திறந்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், மாநில உரிமையை பெறுவதற்கும் புதுச்சேரி அரசின் மாநில கடன்களை தள்ளுபடி  செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி யும் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.