முதலாளித்துவ அல்லது குட்டி முதலாளித்துவ கட்சிகள் போல அல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் கட்சி ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படக்கூடிய அமைப்பு. எனவே ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அவர் எந்த கிளையின் உறுப்பினராக உள்ளாரோ அதன் உருக்கு போன்ற கட்டுப்பாடுக்கு உட்பட்டவர் எனும் கோட்பாடுக்காக லெனின் போராடினார். கட்சிக் கிளைக்குள் ஒவ்வொருவருக்கும் தமது கருத்து சொல்ல முழு உரிமை உண்டு. அதே சமயத்தில் தனது சொந்த கருத்து எதுவாக இருந்தாலும் ஒரு கூட்டு முடிவு எடுக்கப்பட்டவுடன் அதனை அமலாக்கும் பொறுப்பு (மாறுபட்ட கருத்துடையவர்கள் உட்பட) அனைவருக்கும் உண்டு.