tamilnadu

img

தோழர் எஸ்.பஞ்சரத்தினத்திற்கு நினைவஞ்சலி

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த தோழர் எஸ்.பஞ்சரத்தினத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வியாழனன்று (செப்.22) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேசன், துணைப்பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநிலச் செயலாளர்கள் அருட்செல்வன், எஸ்.கண்ணன், துணைத்தலைவர் எம்.தயாளன், மத்திய சென்னை கிளை தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.

;