மதுரை, டிச.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செய லாளர் மறைந்த தோழர் இரா. ஜோதிராம் அவர்களின் நான்காம் ஆண்டு நினை வஞ்சலி நிகழ்ச்சி வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. மாநகர் மாவட்டச் செய லாளர் மா. கணேசன் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், வை. ஸ்டாலின், மாவட்டக் குழு உறுப்பினர் பி. ராதா உள்ளிட்டோர் அவரது உரு வப்படத்திற்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தி னர். மத்திய - 1 ஆம் பகுதிக் குழு கார்க்கி படிப்பகம் சார்பில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பகு திக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலா ளர்கள் கலந்துகொண்டனர். மேற்கு - 2 ஆம் பகுதிக் குழு சார்பில் 81வது வார்டு தியாகி சங்கரலிங்க னார் ஆட்டோ நிலையத்தில் பகுதிக்குழு உறுப்பினர் குரோனி செந்தில் தலைமை யில் நடைபெற்றது வடக்கு - 1 ஆம் பகுதிக் குழு சார்பில் பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டை சாமி தலைமையில் தத்த னேரி பகுதியில் நினை வஞ்சலி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல். முன்னாள் மாமன்ற உறுப்பி னர்கள் க.திலகர்.பழனி யம்மாள் மற்றும் தோழர் ஜோதிராம் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.