திருநெல்வேலி, ஜூலை 7- திருநெல்வேலியில் ஜூலை 12-ஆம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் ஞாயிறன்று தொமுச மாநில அமைப்பு செயலாளர் ஏ.தர்மன் தலை மையில் நடைபெற்றது, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பெருமாள் , மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ்.ஜோதி, ஏஐடியுசி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சுடலை முத்து, எச்எம்எஸ் மாநிலத் துணைத் தலை வர் சுப்பிரமணியன் , பாலசுப்பிரமணியன், ஐஎன்டியுசி நிர்வாகி ஆவுடையப்பன், கண் ணன், டிடிஎஸ்எப் நிர்வாகி சந்தானம், ஆயி ரத்தான், ஏஐடியுசி நிர்வாகி உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜூலை 16-ஆம் தேதி சட்டமன்றத்தில் போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி பணத்தை அரசு மானி யமாக மின்சார வாரியத்திற்கு வழங்குவது போல் வழங்க வேண்டும், 2018 ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படாமல் உள்ள பி.எப், கிராஜுட்டி உள்ளிட்ட பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களின் டி.ஏ., அரி யர்ஸ் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், ஒய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு 2016-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12-ஆம் தேதி பிற்பகல் இரண்டு மணிக்கு வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தொமுச நிர்வாகி மகாவிஷ்ணு நன்றி கூறினார்.