சென்னை, பிப்.21 - 1600 கோடி ரூபாய் நிலுவையை கேட்டு பிப்.25 அன்று 6 மையங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று போக்கு வரத்து ஓய்வூதியர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்துக் கழகத்தில் 86 ஆயிரம் ஓய்வூதியர்கள், 12ஆயிரம் குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தி லிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப் படவில்லை. இதன்படி கடந்த 72 மாதத்தில் அகவிலைப்படியாக சுமார் 1600 கோடி ரூபாய் வழங்கி இருக்க வேண்டும். இந்த தொகையை வழங்க வலியுறுத்தி பிப்.25 அன்று தமிழகத்தில் 6 மையங்களில் முற்று கைப் போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் பல்லவன் இல்லத்தில் உள்ள ஓய்வூதிய அலுவலகம் முன்பும், பிற மாவட்டங்களில் நிர்வாக இயக்குநர் அலுவலகங்கள் முன்பும் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெறும். 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூ திய ஒப்படைப்புத் தொகை என 5 ஆயிரம் கோடி ரூபாயை போக்குவரத்து கழகங்கள் வழங்காமல் உள்ளது. இந்தத் தொகையை யும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், மின்வாரிய ஓய்வூதி யர்களுக்கு தமிழக அரசே ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோன்று போக்கு வரத்து ஓய்வூதியர்களுக்கும் தமிழக அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது சங்கத்தின் பொருளாளர் ஏ.வரதராஜன், நிர்வாகிகள் வீரராகவன், சண்முகம், முத்துக்குமார், நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.