போக்குவரத்துத் தொழிலாளர் ஊதியப் பேச்சுவார்த்தை சுமூகம்
சிஐடியு தலைவர் அ. சவுந்தரராசன் பேட்டி
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் 31.8.2023-ஆம் ஆண்டோடு முடிந்துவிட்டது. 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் 1.9.2023 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்றது. அதன்பின் தொழிலாளர்களின் பல கட்ட போராட்டங்களையடுத்து 2-ஆம் கட்டப் பேச்சு வார்த்தை வியாழனன்று (பிப்.13) சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்கு வரத்துக் கழக பயிற்சி மையத்தில் தொடங்கியது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையிலான போக்குவரத்துத் துறையின் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, கூடுதல் செயலாளர் எஸ். கார்மேகம், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் த. பிரபுசங்கர், சிஐடியு தலைவர்கள் அ. சவுந்தரராசன், கே. ஆறுமுக நயினார், தொமுச தலைவர் கி. நடராஜன் (தொமுச) உள்ளிட்ட 13 சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்குப் பின், சிஐடியு தலைவர் அ. சவுந்தரராசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
1.9.2023 முதல் நிலுவைத் தொகையுடன் ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரி யம், அரசு ஊழியர்களோடு ஒப்பிடும் போது போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிலுவையை முழுமையாக வழங்க வேண்டும். கடந்த 20 மாதங்களாக ஓய்வுபெறுகிறவர் களுக்கு பணப்பலன்களை வழங்கவில்லை. ஓய்வு பெறுகிறபோதே பணப்பலன்களை பெற்றுச் செல்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை அரசு ஈடுகட்டினால் இத்த கைய பிரச்சனையை தீர்க்க முடியும் என்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதைச் செயல் படுத்த வேண்டும்.
புதிய பணி நியமனம் செய்ய வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், அதிகாரிகள் அநியாயமாக தண்டனை வழங்குவது, வழக்கு தொடுப்பது, ஒப்பந்தத்திற்கு விரோதமாக செயல்படுவது போன்றவற்றால் அரசுக்கு அவப்பெயர் உருவாகும். எனவே, இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
1998-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி ஓய்வூதி யத் திட்டம் உருவாக்கப்பட்டது. எனவே, 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும். இதனை செய்தால் கழகங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். அதை வைத்து நிலுவைத் தொகைகளை வழங்கமுடியும்.
ஓய்வுபெற்றுச் செல்கிறவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதிமுக ஆட்சியில் 8 அரசாணைகள் போடப்பட்டன. அதன் காரண மாக புதிதாக ஆள் எடுப்பது தடைப்பட்டுள்ளது. எனவே, அந்த அரசாணைகளை ரத்து செய்ய கோரினோம். இதுபோன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
இவற்றையெல்லாம் பரிசீலிப்பதாகவும், ஓய்வுபெற்றவர்கள், அகவிலைப்படி பிரச்ச னைகளை படிப்படியாக தீர்க்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். ஊதியம் உள்ளிட்டவை களில் என்னென்ன செய்ய முடியும் என்பதை அரசுடன் கலந்துபேசி தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எவ்வளவு ஊதிய உயர்வு வழங்க அரசு முன் வருகிறது என்பதை பொறுத்து தொழிற்சங்கங் கள் கோரிக்கை இருக்கும். மினி பேருந்துகள் தொடர்பான அச்சத்தை எழுப்பினோம். அதற்கு அமைச்சர் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைப் போன்று பிற கழகங்களுக்கும் 2500 பேரை நியமிக்க உள்ளோம் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு சவுந்தரராசன் கூறினார்.
இதனிடையே, வெள்ளியன்று (பிப்.14) 73 சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடைபெறு கிறது. இதனை தொடர்ந்து மீண்டும் 86 சங்கங்களையும் ஒன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.