tamilnadu

img

பொங்கல் தொகுப்பு: இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜன. 8 - பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (ஜன.9) தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளான பொங்கலையொட்டி 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1000 ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்க ப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்காக 2 ஆயிரத்து 429 கோடி ரூபாய் மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதனையொட்டி, மாநிலம் முழுவதுமுள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 6 அடி உயரம் உள்ள செங்கரும்பு தோகை யுடன் வழங்க வேண்டும். 500 ரூபாய் தாள்கள் 2 கையில் கொடுக்க வேண்டும். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை தர மானதாக இருக்க வேண்டும் எனவும் உணவு மற்றும் கூட்டுற வுத்துறை வழிகாட்டியுள்ளது. நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெரு வாரியாக எப்போது வந்து பொங்கல் பரிசை வாங்க வேண்டும் என்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 93 விழுக்காட்டினருக்கு பேருக்கு டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. டோக்கன் இல்லாதவர்கள் 13  ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ள லாம் என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த பரிசுத் தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கும் வழங்கப்படு கிறது. இதையொட்டி ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னை யில் போர் நினைவுச் சின்னம் அருகே உள்ள அன்னை சத்யா நகர்  நியாயவிலை கடையில் 9  மணிக்கு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.  இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் காலை 10 மணி முதல் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.