tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 : 1.31 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை

சென்னை,நவ.19- தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று (நவ.19) நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வை 1.31 லட்சம் எழுதவில்லை. குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92  பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி, சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு  சனிக்கிழமையன்று (நவ.19) நடைபெற்றது.  காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை  தேர்வு நடைபெற்றது. குரூப் - 1 தேர்வை  எழுத 3,22,414 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,90,957 பேர் மட்டுமே தேர்வு எழுதி னர். 1,31,457 லட்சம் பேர் தேர்வு எழுத வில்லை. இதன்படி 59 விழுக்காடு பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 40 விழுக்காடு பேர் தேர்வை எழுதவில்லை.