மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவொற்றியூர் 4ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயராமனை ஆதரித்து திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியம், திமுக அவைத் தலைவர் சோமசுந்தரம், வட்டச்செயலாளர் பவுல், வழக்கறிஞர் அரி, எர்ணாவூர் கிராமத் தலைவர் ராம்குமார், காங்கிரஸ் வட்டச் செயலாளர் டி.மணி, மதிமுக வட்டச்செய லாளர் அருள், விசிக வட்டச் செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.