ஒரு தனிமனிதனைப் பற்றிய புத்தகம் எழுதுவது, அதுவும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒரு வர்க்க அரசியல் கட்சியின் முகமாக, குரலாக, குறியீடாக,அடையாளமாகவும் இருப்பவ ரைப் பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான காரிய மல்ல. ஏனென்றால் அவரின் பணிகளை, அனுபவங் களை, அரசியல் பாதையை, வாழ்க்கையை முழுமை யாக சொல்லவேண்டும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட விசயங்களை தேர்ந்தெடுத்து அதற்குள் நிற்பதும், அதன் மூலம் வாசகருக்கு கடத்த வேண்டிய கருப் பொருள் என்ன என்பதையும் முடிவெடுத்து செய்திடல் அவசியம். அந்த வகையில் நூறாண்டு தாண்டி கம்பீர மாக இந்திய இடதுசாரி இயக்கத்தின் அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் “தோழர் என்.சங்கரய்யா – தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்” எனும் நூலை சமீபத்தில் பாரதி புத்தகால யம் வெளியிட்டுள்ளது.
நிமிர்ந்து நிற்கும் கம்பீரம்
140 பக்கங்கள் கொண்ட இந்நூலில், நூற்றாண்டு கண்ட ஒரு தலைவர் எதற்காக தன் வாழ்நாளின் பெரும் பகுதியை அர்பணித்துள்ளார் எனும் தெளிவு நமக்கு கிடைக்கும். அவரைப்போலவே பொதுவுடமை இயக்கத்தின் மற்றொரு முகமாக இருக்கும் தோழர் ஆர்.நல்லக் கண்ணு பெருமையோடு தன் சக தோழரைப்பற்றி பதிவு செய்ததில் துவங்குகிறது நூல். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களை எப்போதா வது எழுதும் ஊடகங்கள்…அதில் எழுத்தாளர் சோலை என்.எஸ் பற்றி எழுதியது , நாடறிந்த பத்திரிக்கை யாளர் பி.சாய்நாத் தோழர் சங்கரய்யா பற்றி எழுதி யது என நூல் உள்ளே நம்மை இழுக்கிறது.
அந்த பகுதி முடிந்த பிறகு சுமார் 75 பக்கங்களுக்கு சங்கரய்யா உரைகளின் தொகுப்பு. 1970 துவங்கி 1998-99 வரை அவர் ஆற்றிய பல முக்கிய உரைகள் பதி வாகியுள்ளன. எல்லாமே தொலை நோக்கோடு பேசிய தால், சமகாலத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது. அதில் ஆகப்பெரும்பான்மையாக இந்திய சமூகத்தின் மிகப்பெரிய இழுக்கான சாதியைப்பற்றியும் , அதனால் உருவாகும் மோதல்கள் - பதற்றம் - உயிரிழப்பு - பாதிப்பு – சாமானியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்பதை வர்க்க கண்ணோட்டத்தோடு அணுகி – சமூக ஒற்றுமை மேலோங்க கம்யூனிஸ்ட் கட்சி காட்டும் வழியே பொருத்தமானது என்பதையே மிக பிரதான மாக பேசியுள்ளார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளராக பணியாற்றிய காலத்தில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொடர் சாதிய மோதல்கள் நிகழ்ந்தன. அந்த பற்றி எரியும் பிரச்சனை களுக்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் களுக்கே உண்டு எனும் உணர்வோடு அவர் எடுத்த முயற்சிகள், அதையொட்டி மற்ற அரசியல் கட்சிகளிடம் இதுகுறித்து ஒரு பொது புரிதலை உருவாக்குவது, அதன் தொடர்ச்சியாக கரம் கோர்த்து பயணிப்பது என்பதே அவரின் உரைகளை வாசிக்கும் போது உள் வாங்க முடிகிறது. கண்ணை மூடி ஒரு கணம் அவர் இதை அந்த சிம்மக் குரலில் எப்படி பேசியிருப்பார் என நினைத்தால் போதும், உடல் சிலிர்க்கும்.
விதைகளை விருட்சமாக்க...
அவருடைய தொகுக்கப்பட்ட உரையில் அடுத்த தாக தொகுப்பாசிரியர் கருதுவது மாணவர் மற்றும் இளைஞர் நலன். அவர்களின் நலன் மட்டுமல்ல, எவ்வகையில் அவர்கள் சமூக முன்னேற்றத்திற்காக பணிகளை செய்திடல் வேண்டும் என்பதையும் அவ ரின் உரைகள் உந்து சக்தியாக உள்ளன. கல்லூரி படிக்கும் போது தேசம் காக்கும் சுதந்திரப் போரில் ஈடுபட்டவர் அல்லவா! மாணவராக இருக்கும் போதே ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்ட வீரராயிற்றே! மாணவர் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் பெருமாற்றங்கள் எதுவும் நிகழாது என் பதை அறிந்தவர் என்பதால் தான் கலந்து கொண்ட பொதுநிகழ்வுகளில் இந்த இரு பகுதியினருக்கு நம்பிக்கையூட்டும் வகையிலேயே பேசியுள்ளார்.
நாளிதழ்களின் அத்தனை செய்திகளையும் ஆழ மாக, நுணுக்கமாக வாசிப்பதை தரவுகளாக தேக்கி வைத்து கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல் லாம் மறக்காமல் சூழல் கருதி உரையாற்றும் திறன் படைத்த தோழர் என்.சங்கரய்யா, தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசனி டம் ‘செம்மலர்’ இதழுக்காக உரையாடிய நேர்கா ணல் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கி யம் மட்டுமல்ல, பக்தி இலக்கியங்களையும் எவ்வளவு ஆழமாக அவர் வாசித்துள்ளார் என்பது தெரிய வரு கிறது. மொழி, பண்பாடு, தொல்பெருமை, இதிகாசம் என பலவகைப்பட்ட தமிழ் இலக்கியங்களை கற்று அறிந்தவர். அது மட்டுமா, வரலாறு, அரசியல் பொரு ளாதாரம் என சகல துறைகளிலும் வர்க்கக் கண்ணோ ட்டத்தோடு தனது கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்பவர். அதற்கு இந்த பேட்டியே சாட்சி . அதே போல ‘புத்தகம் பேசுது’ மாத இதழுக்காக அவர் அளித்த பேட்டியை படியுங்கள்…ஒரு நேர்த்தி யான போராட்ட வரலாற்றின் நேர்மையான பதிவு. தன்னுடைய அனுபவத்தை மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார். ஒரு உண்மையான வீரரின் பதிவு…நெகிழ்ச்சியாகவே இருக்கும்.
காதல் எவ்வளவு மேன்மையானது-சமூகத்தின் மேன்மைக்கு அது தேவை என்பதை மிகத் துல்லிய மாக தன்னுடைய பேச்சில் அழகுற சொல்லுவார். உதா ரணமாக, காதலிக்கும் பெண்களின் சகோதரர்களி டம் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதை பல கூட்டங் களில் பேசுகிறார். சாதி குறித்து இளைஞர்களிடையே ஒரு புரிதலை உருவாக்கிட இது போன்ற முயற்சி யை அவர் செய்துள்ளார். எப்போதுமே ஒரு நம்பிக்கை யை ஊட்டும் வகையில் தான் அவரின் பேச்சுக்கள் இருக்கும்.
தீண்டாமைக்கு எதிராக...
தோழர் சங்கரய்யா தமிழகத்தில் நிலவி வந்த தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக ஒரு பெரும் இயக்கத்தை கட்டமைக்க அனைத்து முற்போக்கு அமைப்புக்களையும் ஒன்றிணைத்து செய்த பணிகள் மகத்தானவை. அப்படி செய்த போது அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள் இந்நூலில் பதிவாகியுள்ளன. ஒரு தொலைநோக்கு சிந்தனையின் அடையாளம் அவர். தோழர் சங்கரய்யாவின் சமூகப் பணி கடலின் ஆழம் போன்றது. அவரைப் பற்றிச் சொல்ல வேண்டிய விச யங்கள் ஏராளம் உண்டு. அதிலிருந்து கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டியது நமது கடமை. அதைச் செய் வதற்கு நிச்சயமாக இந்த நூல் தொகுப்பு உதவும். நம்மோடு சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கும் ஒரு அப்பழுக்கற்ற, நேர்மையான, சமூகத்தின் மீது தீரா காதல் கொண்ட, ஏற்றுக் கொண்ட லட்சியத்தின் மீது உறுதியாக நின்று கம்பீரமாக சோசலிசத்தின் மேன்மையை இன்றும் நமக்கு கற்று கொடுக்கும் தோழர் சங்கரய்யா பற்றிய புத்தகத்தை ஆயிரமாயிர மாய் கொண்டு செல்வோம்.