tamilnadu

img

தொழிலாளர் வர்க்க நலனில் சமரசம் இல்லை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவும், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநிலக் குழுவும் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் அறிக்கை  ஆகியவற்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள், இன்றைய இதழுடன் தேர்தல் சிறப்பிதழாக இடம் பெற்றுள்ளது. மேலும் பல அம்சங்கள் இங்கு தரப்படுகின்றன. இதர பல அம்சங்கள் நாளைய இதழில் இடம் பெறும்...

*    தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.26000 க்கு குறையாத சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல்; குறைந்தபட்ச ஊதியம் நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைக்கப் பட வேண்டும்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என் பதை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 43ஆம் பிரிவுக்கு ஏற்ப வாழ்வாதாரத்திற்கான ஊதியம்வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகள்.
*    அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கும் குறிப்பிட்ட காலமுறையிலான ஊதிய திருத்தம்.
*    மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது மத்திய ஊதியக் குழுவை அமைத்தல் மற்றும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை வழங்கப்படாத அகவிலைப்படி / அகவிலை நிவாரண நிலுவைத் தொகையை வழங்குதல்.
*    அங்கன்வாடி தொழிலாளர்கள், ஆஷா, மதிய உணவு முகாம் பணியாளர்கள் போன்ற பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களில் பணி
புரியும் அனைத்து தொழிலாளர்களையும் தொழிலாளர்கள் / ஊழியர்களாக அங்கீகரித்தல்; அவர்களுக்கு சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற சமூகப் பாதுகாப்பு பலன்கள் உள்ளிட்டு அனைத்து ஊழியர் பலன்களையும் வழங்குதல்; அவர்களின் தொழிற்சங்க உரிமைகளை உறுதி செய்தல்.
*    தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர் விரோத மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவான அனைத்து திருத்தங்களையும் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
*    மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த சட்டம் உள்ளிட்டு அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் அமல் படுத்துவதை வலுப்படுத்துதல்; பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆட்குறைப்பு / மூடல் இழப்பீடு வழங்குதல் மற்றும் தொழிற் தகராறு சட்ட விதிகளை அமல்படுத்துதல்; தொழிலாளர் நலத் துறைகள் மற்றும் அமலாக்க முகமைகளை வலுப்படுத்துதல்; அனைத்து மாவட்டங் களிலும், தொழில் மையங்களிலும் தொழில் தீர்ப்பாயங்கள் மற்றும் தொழிலாளர் நல நீதிமன்றங்கள் திறத்தல்.
*    அமைப்புசாரா தொழிலாளர்கள் மீதான சட்டத்தை மேம்படுத்துதல்; தொழிலாளர் நல நிலைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துதல்; புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தோட் டத் தொழிலாளர்களுக்கான விசேட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள்; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய நிதியத்தை உருவாக்குதல்; அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம், சுகாதாரம், மகப்பேறு மற்றும் குழந்தை பரா
மரிப்பு பயன்கள், விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு பயன்களை அனைவருக்கும் வழங்குவதற்கான சட்டம்.
*    செயலி வழித் தொழிலாளர்கள் மற்றும் ‘வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள்’ ஆகியோரின் பணி நிலைமைகளை உறுதியாக வரையறுக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்றுதல்; தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களின் பணியாளர்கள் அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் பயன்பெறுவதை உறுதி செய்தல், உரிய சட்டங்கள் மூலம் அவற்றுக்கு விலக்கு அளிக்க வழிவகை செய்யக்கூடாது.
*    ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ மற்றும் ஓய்வூதிய நிதி மேலாண்மை ஆணைய சட்டத்தை ரத்து செய்து, அனைத்து தொழிலாளர்கள் / ஊழியர்களுக்கும் முதலாளிகள் மற்றும் அரசாங்கத் தால் போதுமான நிதியுதவியுடன் நன்மைகள் -வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்; கடைசியாக பெற்ற ஊதியத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத ஓய்வூதியத்தை உறுதி செய்தல்.
*    மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019-ஐ திரும்பப் பெறுதல்.
*    இரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கங் களுக்கு அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய் தல்; தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாத்தல்; அனைத்து நிறுவனங்களிலும் தொழிற் சங்கத்தை சட்டப்படி அங்கீகரிப்பதைக் கட்டாயமாக்குதல்; சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானம் எண் 87 மற்றும் 98 (சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றியது) மற்றும் எண் 189 (வீட்டுப் பணியாளர்கள் தொடர்பானது) ஆகியவற்றை அங்கீகரித்தல்; ஆண்டுதோறும் இந்திய தொழிலாளர் மாநாட்டை தவறாமல் நடத்துதல்.
*    அரசு மற்றும் தனியார் துறைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்கேற்புக்கான பயனுள்ள திட்டத்தை ஏற்றுக்கொள்வது; இரு தரப்பு மற்றும் முத்தரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்; தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக் காமல் தொழிலாளர் தொடர்பான எந்தப் பிரச்சினையிலும் எந்த முடிவும் எடுக்கப்படக் கூடாது, தொழிலாளர் பிரதிநிதிகளுடன் வழக்கமான, அர்த்தமுள்ள சமூக உரையாடலை உறுதி செய்வது.
*    ஒப்பந்த முறை மற்றும் தற்காலிக பணிகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது. ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டம், 1970-ஐ கடுமையாக அமல்படுத்துதல்; ஒரே மாதிரியான பணிகளைச் செய்வதற்கு நிரந்தரத் தொழிலாளர்களைப் போலவே ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் சமமான ஊதியம் மற்றும் சலுகைகள்;நிரந்தர மற்றும் நிரந்தர இயல்புடைய வேலைகளை அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறைமைக்கு உட்படுத்துவதை நிறுத்துதல்; குறிப்பிட்ட கால வரம்புடைய வேலை வாய்ப்பு முறையை ரத்து செய்தல்; அமைப்புசாரா துறையில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கவும், வேலைநிறுத்தம் செய்யவும் ஆன தங்களது அடிப்படை உரிமையை நிலைநிறுத்துவதற்கான உரிமையைப் பாதுகாத்தல். 
*    வீட்டு வேலை உட்பட அனைத்து வேலைகளிலும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியத்தை உறுதி செய்தல்; மகப்பேறு சலுகைகள், 
ஓய்வூதியம் மற்றும் சுகாதார காப்பீடு உள்ளிட்டு அமைப்புசாரா துறையில் பணிபுரியும் பெண் களுக்கு சமூகப் பாதுகாப்பு; அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய 26 வார மகப்பேறு விடுப்பு, மகப்பேறு உதவி மற்றும் குழந்தைகள் காப்பக வசதிகள் மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல்.
*    பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தை கண்டிப் பாக அமல்படுத்த வேண்டும்; இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல்.
*    தொழிலாளர்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட அனைத்து நல வாரியங்களையும் முனைப்புடனும் திறனுடனும் பங்கேற்கச் செய்தல்.