tamilnadu

img

வேடந்தாங்கல் ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

செங்கல்பட்டு, நவ.29- மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கலில் புகழ்பெற்ற பறவை கள் சரணாலயம் உள்ளது. இயற்கை யான குளிர்ச்சியான சூழ்நிலை, உணவு மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கு  வெளிநாடுகள் மற்றும் வெளி மாநி லங்களில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி ஆண்டுதோறும் ஏரா ளமான பறவைகள் வருவது வழக்கம். வடகிழக்கு பருவமழை தீவிரம டைந்துள்ள நிலையில் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இயற்கையில் குளிர்ச்சியான சூழ்நிலைக்காக அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகளின் வருகை இருக்கும். தொடர்ந்து 6 மாதம் பறவைகள் தங்கி இருக்கும். பல்வேறு வகை யான வெளிநாட்டு பறவைகள் குஞ்சு  பொரித்து மே அல்லது ஜூன் மாதம் தங்க ளது சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்க ளில் இருந்து வரும் பறவைகள் மட்டு மின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பறவை மற்றும் வாத்து வகை  இனங்கள் உள்ளிட்ட 23 அரிய வகை பறவை இனங்கள் வரும்.

இந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரண மாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதனால் கடந்த சில  நாட்களாக வேடந்தாங்கல் ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வரத்தொடங்கி உள்ளது.இதில் கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நத்தை குத்தி  நாரை, கரண்டிவாயன், தட்ட வாயன்,  நீர்காகம், வக்கா உள்ளிட்ட 8 வகை யான பறவைகள் அடங்கும். வரும் நாட்களில் வெளிநாடுகளில்  இருந்து மேலும் ஏராளமான பறவை கள் வரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. தற்பொழுது வந்துள்ள பறவை யினங்கள் மரத்தில் கூடுகட்டி உள்ளன.  மரங்களில் பறவைகள் கூட்டமாக அமர்ந்து இருப்பதை பார்த்து சுற்றுலா  பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதுவரை வேடந்தாங்கல் சரணாலயத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்  பட்ட பறவைகள் வந்துள்ளதாக வேடந்  தாங்கல் வனச்சரக அலுவலர் லெஸ்லி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்  சரக அலுவலர் லெஸ்லி கூறியதாவது: வேடந்தாங்கல் ஏரிக்கு வளை யப்புத்தூரில் இருந்து வரக்கூடிய நீர்  வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டுள் ளது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து வந்து  கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மதுராந்தகம் ஏரி பறவைகளுக்கு அதிக  அளவிலான மீன் மற்றும் பூச்சி இனங்  கள் கிடைக்கும் பகுதியாக இருந்து வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக மது ராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணி நடை பெறுவதால் அங்கு தண்ணீர் இல்லை. எனவே பறவைகளின் உணவு தேவைக்  காக 3 மாதத்துக்கு ஒரு முறை 50 ஆயி ரம் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. வரும் நாட்களில் கூடுதலாக வெளி நாடுகளில் இருந்து கூடுதலாக பறவை யினங்கள் வரும் என்று எதிர்பார்ப்ப தாகவும் வனத்துறையினர் தெரிவித் துள்ளனர்.