திருவில்லிபுத்தூர் நகர்மன்ற 11, 12-ஆவது வார்டுகளில் வென்ற திமுகவின் சிவக்குமார், சுகுமாரி தம்பதியினர் நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆணையாளர் மல்லிகா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திருவில்லிபுத்தூர் 6-ஆவது வார்டில் வென்ற திமுகவின் வளர்மதிக்கு நகராட்சி ஆணையாளர் மல்லிகா பதவி பிரமாணம் செய்து வைத்தார். திருவில்லிபுத்தூர், மம்சாபுரம் பேரூராட்சி 10-ஆவது வார்டில் வென்ற திமுகவின் தங்க மாங்கனி பதவியேற்றுக் கொண்டார்.