விருதுநகர், மார்ச் 12- விருதுநகர் அருகே சூலக்கரையில் பகுதி நேர நியாய விலை கடையினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலை மையேற்றார். பின்பு, அமைச்சர், குடும்ப அட்டைதா ரர்களுக்கு ரேசன் பொருட்களையும், 3 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளையும் வழங்கினார். பின்பு அமைச்சர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத் தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும், 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 6லட்சத்து 10ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இக்கடையின் மூலம் 310 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மன் சசிகலா, வட்டாட்சியர் அறிவழகன், வட்ட வழங்கல் அலு வலர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.