tamilnadu

img

நீதியை மட்டுமல்ல, சமூக மாற்றத்தையும் தந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை, ஜூலை 20- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமையன்று மதுரை  தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்று பேசி யதாவது: “ஔவையார், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல்” என குறிப்பிட்டுள்ளார். எனது மராத்திய மொழியில் அறிந்து  சொல்கிறேன், இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்  லது, மதுரை தூங்கா நகரம்,  24 மணி நேரமும் விழித்துக் கொண்டு இருக்கும் நகரம்  மதுரை. தமிழ் கலாச்சாரத்  தின் நல்ல இயல்புகள் எப்  போதுமே மகிழ்ச்சி அளிப் பவை, விருந்தோம்பல் பண்பு அழகானது. சென்னை உயர்  நீதிமன்றம் ஆலமரம் போன் றது, வழக்கறிஞர்கள் பொது மக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல  உத்தரவுகள் உள்ளன, கடந்த 20 ஆண்டுகளில் கலாச்  சாரத்தின் அடையாளமாக வும் மதுரைக்கிளை அமைந் துள்ளது, நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்த போது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் வித மாக நடவடிக்கை எடுக்கப்  பட்டது, ஒரு வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் போது,  அது சமூகத்தின் பிரச்சனை யை முன்னிறுத்தும் விதமா கவே அமைகிறது, மதுரைக் கிளை நீதியை மட்டுமல்ல சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது, மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு சொல்லிக்கொடுத்து ஊக்கு விக்க வேண்டும், உலகிலே 1500 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே முதல் பெண் வழக்க றிஞராக கண்ணகி செயல்பட்  டுள்ளார்” என்று பேசினார்.