tamilnadu

img

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டம், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்ற இயக்கத்தை, கல்லூரியின் தாளாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.ஆல்பின்ராஜ், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், மாநிலக்குழு உறுப்பினர் அ.ஜானகி, மாவட்ட துணைத்தலைவர் கே.சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.