பாலக்காடு, ஏப்.22- வயநாடு மேப்பாடியில் குடும்ப வன்முறை புகாரை விசாரிக்க வந்த மகளிர் பாதுகாப்பு அதிகாரி மீது நாயை கட்டவிழ்த்து விட்டு கடித்து குதறிய சம்பவத்துக்கு மகளிர் ஆணைய தலைவர் பி.சதிதேவி கண்டனம் தெரிவித்தார். இந்த வழக் கின் விசாரணை குறித்து, வயநாடு மாவட்ட காவல்துறைத் தலைவரிடம் கேட்டறிந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேப்பாடியைச் சேர்ந்த ஜோஸ் மீது அவரது மனைவி அளித்த குடும்ப வன்முறை புகாரின் பேரில் மகளிர் பாது காப்பு அலுவலர் மாயா பணிக்கர் நேரடி யாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது கட்டியிருந்த நாயை அவிழ் த்துவிட்டு பாதுகாப்பு அலுவலரை கடிக்கச் செய்துள்ளார். இதுகுறித்து மாயா பணிக்கர் தொலைபேசியில் தெரிவித்த அனைத்து தகவல் களையும் கேட்ட மகளிர் ஆணைய தலைவர் பி.சதிதேவி, அனைத்து உத விகளையும் கேரள மகளிர் ஆணை யம் செய்து தருவதாக உறுதியளித் தார். இந்த வழக்கின் விசாரணை குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வயநாடு மாவட்ட காவல்துறை தலை வர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். குடும்ப வன்முறை புகார்கள் மீதான விசாரணையின் போது, மகளிர் பா துகாப்பு அலுவலர்கள் கோரினால், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத் தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு மாவட்ட மகளிர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உள்ளது. குடும்ப வன்முறைகள் அதிகரித்து வரும் இவ்வேளையில் தங்களின் பொறுப்பை நிறைவேற்ற பல சிக்கலான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது வருத்தம ளிக்கிறது. மனித நேயத்தை கூட மதிக்காமல் கொடூரமாக நடந்து கொண்ட ஜோஸ் என்பவரை உடன டியாக கைது செய்த கேரள காவல் துறையின் செயல் பாராட்டுக்குரியது. இந்திய தண்டனைச் சட்டம் 326, 346, 330, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளி கைது செய்யப்பட்டுள் ளதாக காவல்துறைத் தலைவர் தெரி வித்துள்ளார்.