tamilnadu

img

உயர்ந்த கோபுரங்களின் அஸ்திவாரம் தோழர் எம்.என்.எஸ்.

மதுரை, மே 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சாணி யாக,  பல உயர்ந்த கோபுரங்களுக்கு அஸ்திவார மாக இருந்தவர் மறைந்த தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் என சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.  மே 1-ஆம் தேதி காலமான  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமனின் படத் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அவரது உருவப் படத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்த்திய புகழஞ்சலி உரையில் அவர் பேசியதாவது:-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருப்புக் கோட்டை தாலுகா செயலாளர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பி னர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என தமது  65 ஆண்டுகால வாழ்வில் 45 ஆண்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவே ஒப்புக் கொடுத்தவர். தமுஎகச, மாணவர், மாதர், வாலிபர்  அரங்கங்களுக்கு பொருத்தமான தோழர்களைக்  கண்டறிந்து

அவர்களுக்கு தத்துவார்த்தப் பயிற்சி, போராட்டக் கள அனுபவங்களை கற்றுக் கொடுத்து கட்சியின் உயர் பொறுப்புக்கு  அழைத்துவந்தவர் எம்.என்.எஸ். தீக்கதிர் பொறுப்பு, பல்வேறு மாவட்டங்களின் பொறுப்பா ளராக மட்டுமல்லாமல் சிறந்த  வழிகாட்டியாக இருந்தவர். எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதை நுணுக்கமாக அணுகி சாதுர்யமாக அதில் வெற்றி  காண்பார். அந்த வெற்றியை அவர் கட்சிக்குக்  கிடைத்த வெற்றி என பெருமிதம் கொள்வார். மார்க்சிய சிந்தனையாளரான எம்.என்.எஸ்.  மிகவும் எளிமையானவர். தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல் கட்சி, இயக்கத்தின் கொள்கை களுக்கே முன்னுரிமை கொடுப்பார். சிறந்த  கம்யூனிஸ்ட்டுக்கான அனைத்துக் குணங்களை யும் கொண்டவர் எம்.என்.எஸ்.  அவர் கட்சி யின் அச்சாணியாக மட்டுமல்ல பல உயர்ந்த கோபுரங்களுக்கு அஸ்திவாரமாக இருந்தார். ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் தமக்காக, தமது குடும்பத்திற்காக வாழ்வதை விட நாட்டுக்காக வாழ்பவர்கள், நாட்டு மக்களுக்காக போராடு பவர்கள். நாம் அனைவரும் நமது உடல்நலத்தி லும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார். தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில், அழுக்கே இல்லாத ஒரு ஆளுமை  எம்.என்.எஸ்., தீக்கதிர் என்ற தேர் நெருக்கடி களுக்குள்ளானபோது அதை அனைவரோடும் சேர்ந்து இழுத்து தொடர்ந்து ஓடச்செய்தவர். சிக்க லாகக் கிடக்கும் நூல்கண்டை நுணுக்கமாக, லாவகமாக விடுவிப்பது போல் எந்த ஒரு  பிரச்சனையையும் நுணுக்கமாகக் கையாள்வார்.  ஆனால், அவரது இதயத்தில் இருந்த சிக்கலை  நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஒவ்வொரு  தோழரும் கட்சியையும், கொள்கையையும், இயக்கத்தையும் நேசிக்கும் நேரத்தில் நம்மு டைய உடல்நலனையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

சு.வெங்கடேசன் எம்.பி., எஸ்.கண்ணன்

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் பேசுகையில், எம்.என்.எஸ். அரசியல்,  தத்துவார்த்தத்தில் உறுதியாக நின்றார். அனை த்து நிலைகளிலும் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார். சமூக மாற்றத்திற்கு, சமூக விடுதலைக்கு ஒரு முக்கியப் பங்களிப்பாளராக திகழ்ந்தார் என்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் கூறுகையில், தென் தமிழகத்தில் அவர் போகாத மாவட்டங்கள் இல்லை. மார்க்சிய தத்து வக்கல்வியை எளிய முறையில் எடுத்துக் கூறு வதில் திறமையானவர் என்று குறிப்பிட்டார்.   கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா. கணேசன் பேசுகையில் , உள்ளாட்சித் தேர்தலையும் மாநில மாநாட்டையும் வெகு சிறப்பாக நடத்தி மாநிலக் குழுவில்  மிகப் பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தவர் தோழர் எம். என். எஸ்.வெங்கட்டராமன் அவர்கள்  என்று கூறினார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் பேசுகையில், புறநகர் மாவட்டத் தோழர்களுக்கு மார்க்சிய கல்வியை நீங்கள் போதிக்க வேண்டும்.

அதற்கான வகுப்பு களை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று அவரி டம் கூறி வந்தேன். அந்த அளவிற்கு தோழர்களி டம் பக்குவப்பட்டவர் என்று தெரிவித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் தீக்கதிர் பொறுப்பாசிரியருமான எஸ்.பி.ராஜேந்திரன் பேசுகையில், மறைந்த தோழர்கள் குறித்த குறிப்புகளை எடுத்து செய்தி ஆக்குவதில் நான்  இவ்வளவு சிரமப்பட்டது இல்லை .தோழர் என்.  ராமகிருஷ்ணன் தோழர் எம். என். எஸ்.வெங்கட்ட ராமன் ஆகியோரது மறைவுச் செய்திகளை எழுதும் போது மிகப் பெரும் மனவேதனை அடைந்தேன் என்று தெரிவித்தார்.   மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கே. பொன்னுத்தாய் பேசுகையில், அறிவொளி இயக்கம் துவங்கிய போது தோழர் எம். என். எஸ். எங்களை அதிலிருந்து பணியாற்றும்படி கூறினார். எங்களுக்கெல்லாம் ஒரு தந்தையைப் போன்றவர் என்று கூறினார். இந்த படத்திறப்பு நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினா்கள் இரா.விஜயராஜன்,  எஸ்.பாலா,   மதுரை துணைமேயர் நாகராஜன், தீக்கதிர் மேலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.