திருச்சிராப்பள்ளி, ஜன.25 - 14 ஆவது தேசிய அளவிலான 11 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மினி ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த ஜன.18 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்பட 20 அணிகள் பங்கேற்றன. இதில் தமிழ்நாடு ஆண்கள் அணியினர் 7 - 3 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர். தமிழ்நாடு பெண்கள் அணியினர் 5 - 3 என்ற கோல்கணக்கில் மகாராஷ்டிரா அணியை வென்று வெண்கலப் பதக்கம் வென்றனர். தமிழ்நாட்டிற்கு வெண்கலம் மற்றும் கோப்பையை வென்று தந்த திருச்சி சாய்ஜி ரோல்பால் அகாடமியில் பயிற்சி பெற்ற, திருச்சியை சேர்ந்த மாண வர்கள் ரித்திக், துருவன், அருண், மாணவி சுதர்ஷினி ஆகியோ ருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருச்சி கே.கே. நகர் சாய்ஜி ரோல்பால் பயிற்சி மையத்தில் நடந்த பாராட்டு விழாவில், தென்னிந்திய செயலா ளர் சுப்பிரமணியம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் சரவணன், பிரேம்நாத், பொருளாளர் ராஜசே கர், செயற்குழு உறுப்பினர் மணி கண்டன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய்ஜி ரோல் பால் சங்க செய லாளர் மதுமிதா, பொருளாளர் காயத்ரி, சாய்ஜி பயிற்சியாளர் சுப்புராஜ், சிவ குமார், லோகநாதன், திருநாவுக்கரசு அரவிந்த், ஆகாஷ் செந்தில் மற்றும் பெற்றோர்கள் வீரர், வீராங்கனைகளை பாராட்டி கௌரவித்தனர்.