tamilnadu

இலங்கையிலிருந்து தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

சென்னை, மார்ச் 10- இலங்கையில் இருந்து விடுதலையான தமி ழக மீனவர்கள் 29 பேர் சென்னை வந்தனர். நாகப்பட்டினம், காரைக்கால், ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 29 தமிழக மீனவர்களை சமீபத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. இதையடுத்து அவர்கள் 29 பேரும் சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்திய தூதரகம்  மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் கள். பின்னர் அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.