மே 20 முழு வேலை நாளையும் ஒதுக்கியது உச்சநீதிமன்றம்!
வக்பு திருத்தச் சட்டம் மீதான விசாரணை
புதுதில்லி, மே 15 - வக்பு திருத்தச் சட்டத் திற்கு எதிரான வாதங்களைக் கேட்க தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமை யிலான உச்சநீதிமன்ற அமர்வு, மே 20 அன்று முழு வேலைநாளையும் ஒதுக்கி யுள்ளது. கடைசியாக இந்த வழக்கு, கடந்த மே 5 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மே 13 அன்று ஓய்வுபெற உள்ளதால், புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையி லான அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று சஞ்சீவ் கன்னா அறிவித்தார். அதன்படி, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு, வியாழனன்று (மே 15) நீதிபதிகள் பி.ஆர். கவாய் அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசுத் தரப்பில் விரிவான பதில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதர வாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மே 20 அன்று ஒரு முழு வேலை நாளையும் ஒதுக்க முடிவு செய்துள்ளது. வழக்கு ஒத்திவைக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய, வழக்கறிஞர்கள் தங்கள் ஆவணங்கள் மற்றும் சட்டப் புள்ளி விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில் முன்கூட்டியே தயாராக வருமாறு தலைமை நீதிபதி கவாய் கேட்டுக் கொண்டுள்ளார்.