சென்னை, டிச. 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராக எல்.சுந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது வடசென்னை மாவட்ட மாநாடு ஞாயிறுமற்றும் திங்கட்கிழமை (டிச. 26, 27) ஆவடி திருமுல்லை வாயலில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப் ்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருணன் பேசினார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் செயலாளர் அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். பிரநிதிகளின் விவாதத்திற்கு பிறகு மாவட்டச் செயலாளர் தொகுப்புரை வழங்கினார். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் பேசினார். புதிய மாவட்டச் செயலாளராக எல்.சுந்தர்ராஜன் தேர்வு செய்யப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், எம்.ராம கிருஷ்ணன், ஆர்.ஜெயரா மன், வி.ஜானகிராமன், ஆர்.லோகநாதன், அ.விஜய குமார், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஸ்குமார்,எம்.பூபா லன், பா.சரவணதமிழன், எஸ்.பாக்கியலட்சுமி உள்ளிட்ட 37 மாவட்டக் குழு உறுப்பினர்கள்தேர்வுசெய்யப்பட்டனர். வரவேற்பு குழு செயலாளர் அ.ஜான் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
நாட்டின்மொத்த தொழில் உற்பத்தியில் 45 சதமும், ஏற்றுமதியில் 48 சதமும், வேலைவாய்ப்பில் 40 சதமும் தந்திடும்சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை பாதுகாத்திட ஒன்றிய, மாநில அரசுகள் முனவர வேண்டும்..அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, வடசென்னை யில் நூலகம் மற்றும் கலைய ரங்கம் அமைக்க வேண்டும், மெட்ரோ ரயில் சேவையை வட சென்னை முழுவதும் இணைக்கும் வகையில் அமைக்க வேண்டும். திருநின்றவூரில் இருந்து திருமங்கலம் வரைமெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்மிடிப் ்பூண்டி வரை புறநகர் ரயில்க ளுக்கென்று தனிப் பாதையை உருவாக்கி கூடுதலாக ரயில்கள் இயக்க ப்பட வேண்டும். உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.