tamilnadu

img

மதுரையில் தினமும் கொட்டித் தீர்க்கும் கனமழை கூடுதல் அதிகாரிகளை நியமிக்க சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

மதுரை, அக்.27- மதுரையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்  லாத அளவிற்கு கனமழை கொட்டித் தீர்க்கும் நிலையில், சென்னையைப் போல  மதுரைக்கும் வெள்ள மீட்புப் பணிகளுக்கு  கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்  என்று முதல்வருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை செல்லூர், மீனாம்பாள்புரம், புதூர், காந்திபுரம் பாண்டியன் நகர், நாராய ணபுரம், மகாத்மா காந்தி நகர் ஆகிய பகுதி களில் வெள்ளம் சூழ்ந்த இடங்களைப் சு.  வெங்கடேசன் எம்.பி., துணைமேயர் தி.நாகராஜன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து சு.வெஙகடேசன் எம்.பி.,  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழை இப்போது தான் துவங்கியுள்ளது. ஆனால், அதற்குள்  அனைத்து கண்மாய்களும் மதுரையில் நிரம்பியுள்ளன. எனவே கூடுதலான பேரிடர் மீட்புப் பணியினர் இங்கு தேவைப்  படுகின்றனர். எனவே இங்கிருக்கும் அரசு  இயந்திரங்கள், மாவட்ட நிர்வாகத்தினரை வைத்து இதைச் சமாளிக்க முடியும் என்றா லும் கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சென்னையில் எப்படி தமிழ கத்தில் இருந்து பல மாவட்ட அதிகாரிகளை வைத்து மீட்பு பணி செய்யப்பட்டதோ, அதேபோல் மதுரைக்கு கூடுதல் அதிகாரி களை நியமித்திட வேண்டும் என்பது என்னு டைய கருத்து. நிச்சயம் மாநில முதல்வர் அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்” என்று  கூறினார். மேலும், “ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை 23 சதவீதம் அதிகம் பெய்துள்  ளது. அதேபோல் தற்போது வடகிழக்கு  பருவமழை ஆரம்பிக்கும் முன்னரே அனைத்து கண்மாய்களும் நிரம்பியுள்ளன.  இது 25 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கின்றது.  அடுத்து பெய்திடும் மழை என்பது மது ரைக்கு சவாலான விஷயமாக இருக்கும்.  எனவே, மதுரைக்கு தற்போது கூடுதலான பணிச் சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் விழிப்போடு இருந்து இப்பேரி டரை நாம் சந்தித்து மக்களை பாதுகாக்க வேண்டும்” என்றார்.