மூத்த பத்திரிகையாளரும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவருமான பி.எஸ்.டி.புருஷோத்தமன், சென்னை கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் தீபா, உள்ளுறை மருத்துவர் பிரபாகர் மற்றும் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.