‘போதையற்ற தமிழ்நாடு’ எனும் முழக்கத்தை வலியுறுத்தி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தில் திரைக்கலைஞர் சூர்யா கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மாநிலத் தலைவர் எஸ்.கார்த்தி, மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், துணைத் தலைவர் மணிகண்டன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.