விழுப்புரம், செப்.26- விழுப்புரம் மாவட்டம், கண்ட மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அண்ணாவின் முழு சிலை உள்ளது. இந்த சிலையை சிவப்பு துணியால் மூடிய மர்ம நபர்கள், அந்த சிலையின் கழுத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா படத்துடன் செருப்பு மாலையை அணிவித்து சென்றுள்ளனர். இதனை பார்த்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செருப்பு மாலையை அகற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரவியதால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.