tamilnadu

img

ஊரக சுகாதாரத் திட்டம் தமிழகத்திற்கு 3 வது இடம்

சென்னை,அக்.3- ஊரக சுகாதாரத்திட்டத்தில் தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு 3 ஆவது இடம் கிடைத்துள்ளது.  இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி  2-ன் கீழ், மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி, சுமார் 50 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் மற்றும்இடவசதி இல்லாத வீடுகள் பயன்பெறும் வகையில், 413 சமுதாயசுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் 12,525 ஊராட்சி கள் திறந்த வெளியில் மலம் கழித் தலற்ற நிலையை அடைந்தன.

கழிப்பறை வசதிகள்

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி 2-ன் கீழ், கூடுத லாக 3.89 லட்சம் குடும்பங்க ளுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் மலம் கழித் தலற்ற நிலையை தக்கவைத்தல், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை ஆகியவை தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி 2-ன் முக்கியக் கூறுகள்.

பசுமை கிராமங்கள்

சுத்தம் மற்றும் பசுமை கிராமங்களை உருவாக்க, பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கி றது. மேலும், கிராம ஊராட்சிக் கான முழு சுகாதாரத் திட்டத்தின் அடிப்படை யில், பல திட்டங்களை ஒருங்கி ணைத்து மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜல்சக்தி  அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மூலம், ஊரகப் பகுதிகளில் உள்ள சுகா தாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாகக் கொண்டு, மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும். அதனடிப்படையில், 2021-22 இல் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்துக்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்க ளில், தமிழகம் 3 ஆவது இடத் தைப் பிடித்துள்ளது. இதற்கான விருது, குடியரசுத் தலைவர் திரவு பதி முர்முவால் வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், செய லர் பெ.அமுதா ஆகியோர்  இவ்விருதைப் பெற்றுக்கொண்ட னர். இதுதவிர, ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில், வீட்டுத் தோட்டம், தனி நபர் உறிஞ்சுக்குழிகள் மற்றும்சமுதாய உறிஞ்சுக்குழி கள் போன்றகழிவுநீர் மேலாண் மைப் பணிகளுக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்க ளின் கீழ் அப்பணிகள்  மேற் கொள் ளப்பட்டு, 1.03 லட்சம் தனி  நபர், சமுதாய உறிஞ்சுக்குழி கள் மற்றும் வீட்டுத் தோட்டம்  ஆகியவை அமைக்கப்பட் டுள்ளன. தேசிய அளவில் ‘சுஜ லாம் 1.0’ இயக்கத்தில் தமிழகம் 5 வது இடம் பெற்றுள்ளது. இதற்கான விருதையும், குடியர சுத் தலைவரிடமிருந்து அமைச்சர், செயலர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.