tamilnadu

img

ரூ.800 கோடி விவகாரம் தேர்தலுக்காக பணம் பதுக்கியதா ஆளுங்கட்சி? மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

மதுரை:
கும்பகோணத்தில் ரூ.800 கோடி பதுக்கல் தொடர்பானபொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விரிவான உத்தரவிற்காக வழக்கை ஒத்தி வைத்தனர்.

வழக்கறிஞர் ரத்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், “தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக் கண்ணு கொரோனா பாதிப்பால் அக். 31-ஆம் தேதி உயிரிழந்தார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரின் வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தைகைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உண்மையை மறைத்து துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மீது கும்பகோணம் தாலுகா, கிழக்கு மற்றும் பாபநாசம்காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது.கும்கோணத்தில் ரூ.800 கோடி  கைப்பற்றப்பட்டதாகவும்,  இப்பணம் சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக தலைமையால் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாக எதிர்கட்சித் தலைவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

மே மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் போதுவாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக தலைமைஅதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கோடிக்கணக்கான ரூபாயை ரகசியமாக பதுக்கிவைத்திருப்பது தெரிகிறது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இல்லை. நீதிமன்றத்தால் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை உருவாக்க முடியும்.கும்பகோணத்தில் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.800 கோடி பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல்வழியாக புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை இல்லை.கும்பகோணத்தில் அதிமுகவினர் பதுக்கியதாகக் கூறப்படும் ரூ.800 கோடி குறித்தும், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதுகுறித்தும் தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். கும்பகோணம் ரூ.800 கோடி விவகாரம் குறித்தும், அது தொடர்பாக பதிவான மூன்று வழக்குகளின் பின்னணி குறித்தும் விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர்அமர்வு முன்பு திங்களன்று  விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், பணப் பரிமாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து விரிவான உத்தரவிற்காக விசாரணையை ஒத்திவைத்தனர்.

;