திருச்சி ஜங்ஷனில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க கிளை துவக்க விழா
திருச்சிராப்பள்ளி, ஜுன் 24- சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க திருச்சி ஜங்ஷன் பகுதி கிளை துவக்க விழா செவ்வாய் அன்று நடைபெற்றது. விழாவிற்கு சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் சிஐடியு டாக்ஸி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பெருமளவில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக என். நூருல்ஹாசன், செயலாளராக எஸ். ஆண்டனிசுரேஷ், பொருளாளராக சையது முஸ்தபா மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உட்பட 15 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங்க பொதுச் செயலாளர் சந்திரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஆண்டனி சுரேஷ் நன்றி கூறினார்.