tamilnadu

img

வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் வெள்ளம்

வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் வெள்ளம்

சேலத்தில் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் பிரதான சாலையில் மழைநீருடன் கழிவுநீர் வெள்ளம் போல் ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டத்தில் வெள்ளியன்று காலை முதல் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், பிற் பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. தொடர்ந்து மாலை நேரத்தில் ஒரு  மணி நேரம் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாநகர் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிச்சிபாளையம், சூரமங்கலம், அஸ்தம் பட்டி, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி உள் ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிர மத்திற்குள்ளாகினர். திருமணிமுத்தாற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, சேலம் பழைய பேருந்து நிலையத்திலி ருந்து கிச்சிப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து  ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகனங் கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், அப்பகுதியிலிருந்த கடைகளில் மழைநீர் புகுந்தது. கனமழையால் ஆங் காங்கே மழைநீர் தேங்கியதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று, சேலம் தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.முத்துக் கண்ணன், இடைக்கமிட்டி செயலாளர்கள் பி.கணேசன், என்.பிரவீன்குமார், தாலுகா ஒருங்கிணைப் பாளர் கே.பி.சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.