tamilnadu

img

எல்ஐசி பங்குகளை விற்க அறிக்கை

சென்னை, பிப். 15- எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கான நிறுவன தகவல் அறிக்கை பிப்ரவரி 13 அன்று இந்திய பங்குச் சந்தை பத்திர மாற்று ஆணையத்தில் (செபி) எல்.ஐ.சி யால் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரி கள் சங்கம், தேசிய காப்பீட்டுக் களப் பணியாளர் கூட்டமைப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி ஊழியர் கூட்ட மைப்பு ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டுப் போராட்டக் குழு சார்பில் நாடு முழுவதும் திங்க ளன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 

நிறுவன தகவல் அறிக்கை

செபி யில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிறுவன தகவல் அறிக்கை (Prospectus) 5 சதவீத பங்குகளை பங்கு விற்பனைக்கு கொண்டு வரப்  போவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இதற்காக எல்.ஐ.சி.யின் மூலதன தளம் ரூ.6300 கோடியாக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதில் 5 சதவீதம் அதாவது ரூ.310 கோடி பெறுமான பங்குகளை, 31 கோடி பாலிசிகள் விற்பனைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி யின் உள்ளார்ந்த மதிப்பு  ரூ.5,39,686 கோடிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு மூன்று நான்கு மடங்குகள் கூடுத லாக இருக்கலாம்.  இந்தியாவின் மிகப் பெரிய பங்கு விற்பனையாக இது இருக்கும் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எந்த நியாயமும் இல்லை

அரசின் இந்த நகர்வுக்கு எந்த நியாயமும் இல்லை என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் விமர்சித்துள்ளது. “அரசியல் கருத்தொற்றுமை தேவைப்படும் ஒரு மிகப் பெரிய பொருளாதார முடி வை தனி மசோதாவாக கொண்டு வந்து விவாதிக்காமல் பட்ஜெட் உடன் சேர்த்து நிதி மசோதாவின் ஒரு பகுதியாக சொருகி கொண்டு வந்தது ஜனநாயக விரோதம். மக்கள் கருத்தை எதிர் கொள்ள அரசு  அச்சப்படுவதன் வெளிப்பாடு”  என்று  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்  சங்கத்தின் மூத்த தலைவர் அமானு ல்லாகான் கருத்து தெரிவித்துள்ளார்.   “எல்.ஐ.சி க்கு கூடுதல் மூலதனம் தேவையில்லை. எல்.ஐ.சி நூற்றுக் கணக்கான நிறுவனங்களில் முதலீடு செய்து அவற்றின் முதலீட்டுத் தேவை களை பூர்த்தி செய்து வருகிறது. அரசின் நிதிக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியே எல்.ஐ.சி பங்கு விற் பனைக்கு காரணம்” என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஶ்ரீகாந்த் மிஸ்ரா விமர்சித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இரு முறை எல். ஐ.சி பங்கு விற்பனை பற்றி விவாதிக்கப் பட்டு அது கைவிடப்பட்டுள்ளது. ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த போது “ எல்.ஐ.சி பலப்படுத்தப்படும்” என்ற உறுதிமொழி தரப்பட்டது. 2008 இல் மன் மோகன் சிங் காலத்தில் இதற்கான தனி மசோதா கொண்டு வரப்பட்டு பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. இப்போதும் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இடதுசாரிகள் 25 ஆண்டு கால மாக இடை விடாது எதிர்ப்பு தெரி வித்து வந்துள்ளனர். 

கடும் எதிர்ப்பு

அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர் வினைகள் பரவலாக எழுந் துள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “நேருஜி நேசித்த ரோசாவில் சிறு  துளி ரத்தம்” என்று விமர்சித்துள்ளார். கேரள முன்னாள் நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விடு தலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள் ளிட்ட தலைவர்கள் சமூக வலைத் தளத்தில் விமர்சித்துள்ளனர். 

கண்டன ஆர்ப்பாட்டங்கள்

இந்நிலையில், நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் எல்.ஐ.சி  அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எல்.ஐ.சி அலுவலகங்கள் முன்பாக வும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை அண்ணாசாலை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற பெரும் திரள் ஆர்ப்பாட்டத்தில் கூட்டுப் போராட்டக் குழு தலைவர் கள் கே.சுவாமிநாதன், சுரேஷ், ரமேஷ் குமார், விஜயகுமார் உரையாற்றி னார்கள். சென்னை அண்ணாநகர் கோட்ட அலுவலகம் முன்பாக தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் உரையாற்றினார். தமிழகம் முழுவதும் உள்ள கோட்ட அலுவலகங்கள் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் தனசெல் வம், மனோகரன் (சென்னை), பழனிராஜ் (வேலூர்), வி.சுரேஷ் (கோவை), ஆர்.தர்மலிங்கம் (சேலம்), சேதுராமன் (தஞ்சாவூர்) ரமேஷ் கண்ணன் (மதுரை),  பொன்னையா (நெல்லை) மற்றும் முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத் தலைவர்கள் உரையாற்றினார்கள். அரசின் முடிவை எதிர்த்து மக்க ளின் கருத்து திரட்டப்படும் என்றும், போராட்ட நடவடிக்கைகளையும் அறிவிப்போம் என்றும் சங்கங்கள் அறிவித்துள்ளன.  (விரிவான விபரம் 6)