tamilnadu

ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்குக!

ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்குக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என். ரவியை நீக்க வேண்டும் என்று  ஒன்றிய அரசை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.  ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு  முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடி வில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று மூன்று  முறை கூறியதோடு, மாணவர்களை யும் கூறுமாறு நிர்ப்பந்தித்துள்ளார். உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு  மாறாக, இந்துத்துவக் கூடமாக மாற்ற முயலும் ஆர்.என். ரவியின், இந்தப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

நீதிமன்றம் தலையில் குட்டியும் திருந்துவதாக இல்லை

தமிழக சட்டப்பேரவையில் நிறை வேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன் வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.  ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோ தமானது என்று உச்ச நீதிமன்றம் ஓங்கிக் குட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை செய்ய மறுத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமி கள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம் மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல் களாகத் திகழ வேண்டிய கல்விக் கூடங்களை காவிக் கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.

ஆளுநர் பதவிக்கு  சிறிதும் தகுதியற்றவர்

ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அர சியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூ பிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை  நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.