‘கம்யூனிஸ்ட் அறிக்கை 1848 - பிப்ரவரி 21’ அன்று வெளியானது. இந்நாளை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சிவப்பு புத்தக தினமாக கடைபிடிக்கின்றன. குறிப்பாக அன்றைய நாளில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் கூடி முக்கியமான நூல்களை வாசிப்பதை இயக்கமாக முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில், 2025 பிப்ரவரி 21 அன்று மார்க்சிய அறிஞர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய ‘இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?’ நூல் வாசிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒன்றுகூடி நூலை வாசித்தனர். கட்சியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ஆர். கபாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. முருகேஷ், இ. சர்வேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.