முன்னணி வீராங்கனைகளை கதி கலங்க வைத்த கத்தார் ஓபன்
ஏடிபி பிரிவின் முக்கிய சர்வதேச தொடர்களில் ஒன்றான கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகா வில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் டாப் ரேங்க் மற்றும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்ற முன்னணி வீராங்கனைகள் களமிறங்கினர். ஆனால் டாப் 20 ரேங்க் வீராங்கனைகள் யாரும் இறுதிக்கு முன்னேறவில்லை. இளம் வீராங்கனைகளின் அதிரடியால் ரவுண் ட்ஸ் சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி சுற்றுகளிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளனர்.
வெளியேறிய நட்சத்திர வீராங்கனைகள்
ஆண்டிரிவா (ரஷ்யா), கலின்ஸ்கியா (ரஷ்யா), ஹதாத் மாயா (பிரேசில்) , நவர்ரோ (அமெரிக்கா), சபலென்கா (பெலாரஸ்), ஜெங் (சீனா), சுவிட்டோலினா (உக்ரைன்), சம்ஸோநோவா (ரஷ்யா), கார்சியா (பிரான்ஸ்), பவோலினி (இத்தாலி), படோசா (ஸ்பெயின்), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), ஜபியுர் (துருக்கி), பெகுலா (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்), ஸ்வியாடெக் (போலந்து) என மொத்தம் 16 முன்னணி வீராங்கனைகள் இளம் மற்றும் பெரியளவு சர்வதேச பின்புலம் இல்லாத வீராங்கனைகளிடம் தோல்வி கண்டார்.