tamilnadu

img

அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு ஆர்ப்பாட்டம்

அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி/பெரம்பலூர், மே 21 - 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு  அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு  மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செய லாளர் பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார்‌. மாவட்டச் செயலாளர் நவநீதன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்.  சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க  மாவட்டச் செயலாளர் பொன். மாட சாமி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செய லாளர் செந்தில்குமார், மாவட்டத் தலைவர் வேலாயுதம், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணி யாளர் சங்க மாவட்டத் தலைவர்  ஜீவானந்தம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் அமுதா, மாவட்டச் செயலாளர்  அல்போன்சா,  தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் வெங்கடேஷ் பாபு, தமிழ்நாடு சாலை ஆய்வா ளர் சங்க சண்முகம், தமிழ்நாடு ரோடியாலஜிஸ்ட் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் பிரபு, தமிழ்நாடு சமூக நலத்துறை கலைவாணி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.  தமிழ்நாடு சத்துணவு சங்க  மாநிலத் துணைத் தலைவர் ஆ. பெரியசாமி நிறைவுரையாற்றி னார். மாவட்ட துணைத் தலைவர் அல்போன்ஸ் நன்றி கூறினார்.  பெரம்பலூர் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் பெரம்ப லூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மாவட்டத் தலைவர் ப.  குமரி அனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் ப.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பிரச்சார செயலாளர் சு.சரவணசாமி கோ ரிக்கைகள் குறித்து விளக்க உரை யாற்றினார்.  தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பெ. ராஜ்குமார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஜா. ஏவாள் மேரி ,தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத் தின் மாவட்ட நிர்வாகி ராஜதுரை  ஆகியோர் கண்டன உரையாற்றி னர். மாவட்டச் செயலாளர் சி. சுப்பிர மணியன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி  பேசினார்.