உதகை, டிச.19- நீலகிரியில் நிரந்தர பணி யாளர்களுக்கு வேலை தரா மல் அலைக்கழிப்பு செய்யும் தனியார் தேயிலை தொழிற் சாலை நிர்வாகத்தை கண் டித்து சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான இண்ட்கோசர்வ் கரும்பாலம் மற்றும் மாகலிங்கா தேயிலை தொழிற்சாலை யில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு வேலை கொடுக்காமல் பல மாதங்களாக அலைகழித்து வந்தனர். இதனால், இத்தொழி லாளர்களின் குடும்பத்தினர் பெரிதும் பாதிப் புக்குள்ளாகி வந்தனர். இதனையடுத்து, குன் னூர் இண்ட்கோசர்வ் அலுவலகத்தில் அமர்ந்து 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் சங்கர லிங்கம் மற்றும் மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் பங்கேற்று, தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றனர். இத னையடுத்து,நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்சனைகளை சுமூகமாக முடித்து தருவதாக உறுதியளித்த னர். இதனையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.