tamilnadu

img

ஜே.டி.வேன்ஸ் வருகைக்கு எதிராக போராட்டம்! இந்திய வேளாண்மையை சிதைக்க முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியம்

ஜே.டி.வேன்ஸ் வருகைக்கு எதிராக போராட்டம்! இந்திய வேளாண்மையை சிதைக்க முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியம்

விவசாயிகள் நாடு தழுவிய அறைகூவல்

புதுதில்லி, ஏப்.19- இந்திய வேளாண்மை சிதைப்ப தற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் முய லும் நிலையில், அவர்களின் நிர்ப்பந்தத் திற்கு மோடி அரசு சரணாகதி அடை வதைக் கண்டித்தும், அமெரிக்க துணை  ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸின் இந்திய  வருகையை எதிர்த்தும், போராட்டங்கள் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத் துள்ளனர். “வேன்ஸ் திரும்பிப் போ! இந்தியா விற்பனைக்கு இல்லை” என்ற முழக்கத்  துடன் ஏப்ரல் 21 அன்று நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் பொம்மை எரிப்பு  போராட்டங்களுக்கு அகில இந்திய விவ சாயிகள் சங்கம் (AIKS) நாடெங்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் விஜூ  கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “அமெரிக்க துணை ஜனாதி பதி ஜே.டி. வேன்ஸின் இந்திய வருகை யானது, இந்திய அரசு மற்றும் கார்ப்ப ரேட் தலைமையிலான ஆளும் வர்க்கங்  கள் மீது அழுத்தம் கொடுத்து, பன்னாட்டு  நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு  நாட்டின் நலன்களை விட்டுக்கொடுக்க வைக்கும் நோக்கம் கொண்டது” என்று  குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக ஆக்கிரமிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில், உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய வரிக்  கொள்கைகளை அமல்படுத்தி வரு கிறார்.  அந்த வகையிலேயே அமெரிக்க வர்த்  தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், “இந்  தியா தனது வேளாண் சந்தையைத் திறக்க வேண்டும்,” என்றும்; “இருதரப்பு  வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைப் பட்டியலில், வேளாண்மை யை விலக்கி வைக்க முடியாது” என்றும்  கூறியுள்ளார். இதனால், இந்திய வேளாண் துறை யை, அமெரிக்க பெருநிறுவனங்களின் கைப்பாவையாக மாற்றும் முயற்சியா கவே விவசாயிகள் அமைப்புகள் பார்க்  கின்றன.

விவசாயிகளை வஞ்சிக்கும் ஒப்பந்தம்

விவசாயிகள் சங்க அறிக்கையின் படி, “தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத் துறைக்கு பேர ழிவை ஏற்படுத்தும். குறிப்பாக:

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆபத்து

வரிகளும், சந்தைக் கட்டுப்பாடு களும் நீக்கப்பட்டால், அமெரிக்க பால்  பொருட்களின் ஏற்றுமதி இந்தியாவிற்கு  பெருமளவில் அதிகரிக்கும். இது இந்தி யாவின் பால் உற்பத்தியாளர்களுக்கு மரண அடியாக அமையும். இந்தியா வில் பால் உற்பத்தித் துறையில் கோடிக்க ணக்கான சிறு மற்றும் குறு விவசாயி கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்  வாதாரம் அமெரிக்க பால் பொருட்க ளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

கோதுமை விவசாயிகளின்  நிலை கேள்விக்குறி

அமெரிக்க கோதுமை கூட்டமைப்பு, இந்தியாவிற்கு உயர் அளவிலான உள்  நாட்டு ஆதரவும், வர்த்தகத்தைச் சிதைக்  கும் உயர்வரிகளும் உள்ளதாக குற்றம்  சாட்டுகிறது. இந்தியாவில் விவசாயிகள்  குறைந்தபட்ச ஆதார விலை (MSP)  கோரி, போராடும் சூழலில், அமெரிக்கா வின் இந்த நிலைப்பாடு நகைப்புக்குரிய தாக உள்ளது. அமெரிக்க கோதுமை இந்  திய சந்தையை நிரப்பினால், உள்நாட்டு  கோதுமை விவசாயிகளின் வாழ்வாதா ரம் அழிந்துவிடும். மக்காச்சோளத்தை பொறுத்தவரை, அமெரிக்காவிற்கு பெரும் லாபம் ஈட்டும்  நோக்கத்தில், மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் மற்றும் எத்தனால் மீதான இந்தியாவின் இறக்குமதி தடை யை நீக்க அழுத்தம் அதிகரித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் இந்திய சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆபத்து உள்ளது.

தோட்டக்கலைப் பயிர்கள், பருத்தி எல்லாமே ஆபத்தில்!

சோயாபீன், பாதாம், பிஸ்தா, வால் நட், ஆப்பிள் மற்றும் தோட்டக்கலை பயிர்  கள் அனைத்தும் அமெரிக்க விவசாய  விளைபொருள் வர்த்தக பெரும் கார்ப்ப ரேட் குழுமக் கூட்டணியின் வேண்டு கோளின் பேரில் பேச்சுவார்த்தையில் உள்ளன. இந்திய பருத்தி விவசாயிகள், ஏற்கெனவே கடுமையான நெருக்கடி யில் உள்ளனர். 2017-18ல் 37 மில்லியன்  பேல்களாக (ஒவ்வொன்றும் 170 கிலோ)  இருந்த வருடாந்திர பருத்தி உற்பத்தி,  2022-23ல் 34.7 மில்லியன் பேல்களாக வும், 2023-24ல் மேலும் குறைந்து 31.6  மில்லியன் பேல்களாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சூழலில் வரிகளை நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் உணர்வற்றதாக உள்ளன.

மோடி அரசு சரணாகதி

2025-இல், நரேந்திர மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், ஒன்றிய  பாஜக அரசு அமெரிக்காவின் அழுத்தத்  திற்கு முற்றிலும் சரணாகதி அடைந்துள்ள தாக அகில இந்திய விவசாயிகள் சங்கம்  குற்றம் சாட்டுகிறது.  “இந்திய பிரதமர், அமெரிக்க ஜனாதி பதி டொனால்டு டிரம்பின் கட்டளை களுக்கு முன் சரணடைந்து, அமெரிக்கத்  தயாரிப்புகளுக்கான வரி மற்றும் வரி அல்லாத தடைகளைத் தளர்த்தும் திட்  டங்களை முன்னெடுத்து வருகிறார்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு 70 சதவிகி தத்திற்கும் அதிகமாக ஏற்றுமதி செய் யும் போதிலும் உறுதியாக நிற்கின்றன; ஆனால், அமெரிக்காவுக்கு வெறும் 18 சத விகித ஏற்றுமதி செய்யும் இந்தியா, அமெ ரிக்காவின் வலுவான தந்திரங்களுக்கு எதிராக நிற்க மறுக்கிறது.

விவசாயிகளை பலி தரலாமா?

ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள இந்திய விவசாயிகள், பன்னாட்டு நிறுவ னங்களின் லாபத்திற்காக பலி கொடுக்கப்  படுவதை கடுமையாக எதிர்க்கின்றனர். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் நிகழ்ந்தால், பெரும்பாலான விவசாயப் பொருட்களின் விலை சரிவு ஏற்பட்டு, விவசாயிகள் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்படும்.

நாடெங்கும் எழும் கொந்தளிப்பு

இந்த பின்னணியில், ‘வேன்ஸ் திரும்பிப் போ! இந்தியா விற்பனைக்கு இல்லை’ என்ற முழக்கத்துடன் அகில  இந்திய விவசாயிகள் சங்கம் நாடெங்கும்  போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்  ளது. ஏப்ரல் 21 அன்று ஜே.டி. வேன்ஸ்  இந்தியாவிற்கு வருகை தரும்போது, கிராமங்கள் மற்றும் மாவட்ட தலைமை யகங்களில் பேரணிகள் மற்றும் பொம்மை  எரிப்பு போராட்டங்கள் நடத்தப்பட வுள்ளன.