tamilnadu

img

இந்து முன்னணி குண்டர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி குண்டர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர். சரத்குமார் மற்றும் தொண்டர்கள் மீது இந்துமுன்னணி - பாஜக குண்டர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், இதனிடையே, காவல்துறையானது, பாதிக்கப்பட்ட சிபிஎம் தோழர்களையே 8 பேரைக் கைது செய்துள்ள நிலையில் அவர்களை விடுவிக்கக் கோரியும் சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதனொரு பகுதியாக, திண்டுக்கல் நாகல் நகரில் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ராணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. ஆஸாத், தா. அஜாய் கோஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதேபோல தேனியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாவட்டச் செயலாளர் எம். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.