ரூ.133.32 கோடியில் திட்டங்கள் தொடக்கி வைப்பு
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.133.32 கோடியில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளா கம், தொழிலாளர்கள் தங்கும் விடுதி, 5 புதிய தொழிற்பேட்டை கள் மற்றும் 5 பொது வசதி மையங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை சார்பில், தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியி யல் பணிகள் கழகமும் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம் பதிப்புத் துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச் சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத் தின் பொது முன்னுரை நூலினை யும், முதல் தொகுதி நூலினையும் வெளியிட்டார். மேலும் பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் விதைக்கூடு உற்பத்தியாளர் களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்த இரண்டு பட்டு விவசாயிகள், சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்கள், சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர் களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுத் தொகை யாக ரூ.8.25 லட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூல் மற்றும் அதன் முதல் தொகுதி நூலினை முதலமைச்சர் வெளியிட்டார்.