பிரதமர் மோடி நாளை மறுநாள் சவூதி பயணம்
புதுதில்லி, ஏப்.19- சவூதி அரேபியாவிற்கு வருமாறு, அந்நாட்டு இள வரசர் முகமது பின் சல்மான், இந்தியப் பிரதமர் மோடி க்கு அழைப்பு விடுத்தி ருந்தார். அவரது அழைப் பின் பேரில், பிரதமர் நரேந் திர மோடி ஏப்ரல் 22, 23 தேதி களில் சவூதி அரேபியா செல்ல உள்ளார். அங்கு சவூதி அரே பியாவின் பட்டத்து இளவர சரைச் சந்தித்து பேசுகிறார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்ற னர். பிரதமர் மோடியின் இந் தப் பயணத்தில் போது, சவூதி அரசுடன் பேசி, 52 ஆயி ரம் இந்திய ஹஜ் பயணி களுக்கான ஒதுக்கீடு ரத்தை நீக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என கூறப் படுகிறது.
தங்கம் இறக்குமதி 3 மடங்கு அதிகரிப்பு
புதுதில்லி, ஏப்.19- கடந்த பிப்ரவரி மாதத் தில் 15 டன்னாக இருந்த தங் கம் இறக்குமதி, மார்ச் மாதத்தில் 52 டன்னாக அதி கரித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தங்கம் விலை உயர்ந்த போதிலும் இறக்கு மதி உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிக ரிக்கும் என்று நகை வியா பாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
புதுதில்லி, ஏப்.19- ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கா னிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் பூமிக்கு அடியில் 80 கி.மீ. ஆழத்தில் இந்திய நேரப்படி பகல் 12.17 மணிக்கு இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற் பட்டது. இது ரிக்டரில் 5.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கத்தால் இந்தியாவின் வட மாநிலங்களான ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஹரி யானா, தில்லி உள்ளிட்டவை யும் நில அதிர்வுகளை எதிர்கொண்டன.
கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
திண்டுக்கல், ஏப்.19- கோடைக்காலம் மக் களை வாட்டி வதைக்கத் துவங்கியுள்ள நிலையில், குளிர்ச்சியான சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் துவங்கி யுள்ளனர். குறிப்பாக, ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக் கானலில் சுற்றுலா பயணி கள் குவிந்த வண்ணம் உள்ள னர். வனப்பகுதியில் உள்ள குணா குகை, பில்லர் ராக், பைன்மரக் காடு, மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத் தாக்கு, பேரிஜம் ஏரி, மன்ன வனூர் சூழல் சுற்றுலா, மையம், நட்சத்திர ஏரி, பிரை யண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை யன்று கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.