சென்னை,பிப்.6- சென்னை ஆலந்தூரிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில், ராமர் கற்சிலை பதுக்கிவைக்கப்பட்டு ஜெர்மனி நாட்டு க்கு கடத்தி செல்ல இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை யடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்த ரவின் பேரில் ஐ.ஜி. தினகரன் மற்றும் தனிப்படை காவலர்கள் அந்த நிறுவ னத்தில் சோதனை நடத்தினர். இதில் அங்கு பதுக்கி வைக்கப் ்பட்டிருந்த 1 அடி அகலம், 2 அடி உயரத் ்துடன் கூடிய புராதன ராமர் கற்சிலை சிக்கியது. இந்த சிலையை வைத்திருக்க கூடிய ஆவணங்கள் அந்த நிறுவனத் ்திடம் இல்லாததால், அதனை கைப்பற்றினர். இந்த சிலையின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சிலையின் தொன்மை, எந்த கோவிலில் திருடப்பட்டது, கடத்தல் முயற்சியில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ெஜர்மனி நாட்டுக்கு கடத்தப்பட இருந்த சிலையை மீட்டெடுத்த காவல்துறை யினரை தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டியுள்ளர்.